districts

img

முன்னாள் ஆட்சியர் சி.கதிரவன் காலமானார்

நாமக்கல், பிப்.17- கிருஷ்ணகிரி மற்றும் ஈரோடு முன்னாள் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெள் ளியன்று காலமானார். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம், காந்திபுரம், கிழக்கு வீதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் சின் னத்தம்பி என்பவரது மகன் கதிரவன் (52). இந்திய ஆட் சிப்பணியில் இருந்த அவர் கடந்த 2020-21 ஆம் ஆண்டுகளில் கிருஷ்ணகிரி மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் பொறுப்பை வகித்துள்ளார். மேலும்  சேலம் சேகோசர்வ் நிர்வாக இயக்குனர், சேலம் மாக்னசைட் நிர்வாக இயக்குனர் பதவிகளையும் வகித்துள்ளார். தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட இயக்குநராக அண் மையில் கதிரவன் பொறுப்பேற்றார். இந்நிலையில், வெள்ளி யன்று சென்னையில் நடைபயிற்சியின் போது திடீரென மார டைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருடைய உடல் சென்னை யிலிருந்து சேந்தமங்கலத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு  வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, வனத்துறை அமைச்சர் மா.மதி வேந்தன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., நாமக்கல் ஆட் சியர் ஸ்ரேயா பி.சிங் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.