திருப்பூர், மே 17– இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங் கம் ஆகியவற்றின் திருப்பூர் மாவட்ட அலுவலகக் கட்டிடத்தை புதுப்பித்து கட்டுவது தொடர்பாக கட்டுமானப் பணிக்குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் முருங்கப்பாளையம் கே.தங்கவேல் நினைவ கத்தில் புதனன்று கட்டிடப் பணிக்குழு தேர்வுக் கூட்டம் வாலி பர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.அருள் தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் காலேஜ் ரோடு ஜவான் வீதியில் உள்ள வாலிபர், மாணவர் சங்க அலுவலகக் கட்டிடத்தை புதுப் பித்து கட்டுவது தொடர்பாக வாலிபர் சங்க மாவட்டச் செயலா ளர் செ.மணிகண்டன், முன்னாள் மாவட்டத் தலைவர்கள் ச. நந்தகோபால், ஆர்.காளியப்பன், வை.ஆனந்தன் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலாளர் பி.ஆர்.கணேசன் உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில், கட்டுமானப் பணிக்குழு கௌரவத் தலைவர் சபுரோ எம்.ரங்கசாமி, தலைவர் ஆர்.காளியப்பன், செயலாளர் – செ. மணிகண்டன், பொருளாளர் பி.ஆர்.கணேசன் மற்றும் துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்கள் உள்ளிட்ட 54 பேர் கொண்ட பணிக்குழு தேர்வு செய்யப்பட்டது. வாலிபர், மாணவர் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினரின் இக் கட்டிடத்தை புதுப்பொலிவுடன் கம்பீரமாக கட்டி முடித்து சங் கங்கள் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவது என்று தீர்மானிக்கப் பட்டது.