districts

img

ஊருக்குள் புகுந்த யானைகள் கூட்டம்

கோவை, நவ.16- கோவை தொண்டாமுத் தூர் பகுதியில் உலா வரும் பத்துக்கும் மேற்பட்ட யானைக்கூட்டத்தால், அப்ப குதி விவசாயிகள் மற்றும்  பொதுமக்கள் அச்சமடைந் துள்ளனர். இதனையடுத்து, வனத்திற்குள் விரட்ட வனத் துறையினர் தீவிரம் காட்டி  வருகின்றனர். கோவை தொண்டாமுத் தூர் பகுதியில் மலை அடி வார கிராமங்களுக்கு அடிக் கடி யானைகள் வந்து செல்வது வழக்கம். அந்த வகை யில், தீத்திபாளையம் பகுதியில் கடந்த இரண்டு நாட்க ளுக்கு முன்பு யானை கூட்டம் வந்தது. இவைகள் அங்கிருந்த  உணவுக்காக தக்காளி, வாழை மற்றும் ரேசன் கடைகளி லிருந்து அரிசி உள்ளிட்ட பொருட்களை உண்டு சென் றது. இந்நிலையில், புதனன்று நள்ளிரவில் அய்யா சாமி மலை அடிவாரத்தில் இருந்து வெளிவந்த காட்டு  யானைக் கூட்டம், அருகாமையில் உள்ள தோட்டங்களுக் குள்ளும், கிராமப் பகுதிகளுக்குள் வந்தது. இதனால், இப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்தனர். இதுகுறித்து, அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல்  தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த  வனத்துறையினர், மூன்று குழுக்களாக பிரிந்து யானையை  விரட்டும் பணியில் ஈடுபட்டனர். யானைகள் செல்லப்ப கவுண் டன்புதூர் பகுதி வழியாக சென்று அடர் வனத்துக்குள் விரட் டினர். இந்த யானைகளை விரட்டுவதற்கு மூன்று குழுக்கள்  போதாது எனவும்,  கூடுதலாக வனத்துறை குழுக்களை அமைத்து யானைகளை விரட்ட வேண்டும் எனவும் அப்ப குதி மக்கள் கோரிக்கை முன்வைத்தனர்.