கொடிவேரி அணை 3 நாட்களுக்கு மூடல்
கொடிவேரி அணை 3 நாட்களுக்கு மூடல் ஈரோடு, ஆக.2- நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி, கொடிவேரி அணை 3 நாட்களுக்கு மூடப்பட் டுள்ளது. இதுகுறித்து பவானிசாகர் அணை கோட்ட நீா்வ ளத்துறை செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில், தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் அதிகளவிலான மழை பெய்யக்கூ டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், பவா னிசாகர் அணைக்கு அதிக அளவில் தண்ணீர் வர வாய்ப்புள் ளது. மேலும் பாசனத்திற்காக பவானிசாகர் அணையிலிருந்து 1155 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலை யில், ஆடிப்பெருக்கை முன்னிட்டு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழ மைகளில் கொடிவேரி அணைக்கட்டிற்கு அதிக அளவி லான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பாா்க்கப்ப டுகிறது. தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் எந்நேரமும் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சுற்றுலாப் பயணிகளின் பாது காப்பு கருதி வெள்ளியன்று முதல் திங்களன்று வரை 3 நாட்க ளுக்கு கொடிவேரி அணைக்கட்டு தற்காலிகமாக மூடப்ப டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உதவி மைய எண்கள் அறிவிப்பு
உதவி மைய எண்கள் அறிவிப்பு உதகை, ஆக.2- நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்பதால், காவல் துறை சார்பில் கட்டுப்பாட்டு மைய உதவி எண் கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், மாவட்ட காவல்துறை சார்பில் கட்டுப்பாட்டு மைய எண்கள் அறிவிக்கப் பட்டுள்ளன. அதில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவல கம் 1077, காவல்துறை கட்டுப்பாட்டு அறை 0423 2444111 இல் தொடர்பு கொள்ளலாம். தனிப்பிரிவு அலுவலகம் 9498101260, 9789800100 ஆகிய எண்களையும் பொது மக்கள் தொடர்பு கொள்ளலாம். ஒவ்வொரு உட்கோட்டத்தி லும் பயிற்சி பெற்ற 10 பேரிடர் மீட்பு குழுவினர் உபக ரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். மேலும், நீலகி ரியில் மழையால் ஆங்காங்கே சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதுவரை பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படவில்லை என காவல் கண்காணிப்பாளர் சுந்தரவ டிவேல் தெரிவித்துள்ளார்.
பணமோசடி: 2 பேர் கைது
பணமோசடி: 2 பேர் கைது கோவை, ஆக.2- பங்குச்சந்தையில் லாபம் பெற்றுத் தருவதாகக்கூறி 152 பேரிடம் கோடிக்கணக்கில் பணமோசடி செய்த 2 பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை மாவட்டம், சுங்கம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் மாநகர சைபர் கிரைம் காவல் துறையில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தனது செல்போனுக்கு ஆன்லைன் மூலமாக பங்கு சந்தையில் முதலீடு செய்தால், அதிக லாபம் பெறலாம் என்ற தகவல் வந்தது. இதனை நம்பி அதில் குறிப்பிட்டு இருந்த செல்போனில் தொடர்பு கொண்டு பேசியதைத்தொ டர்ந்து, லாபத்துடன் முதலீடு செய்வது தொடர்பான வீடியோவை வாட்ஸ் அப்பில் அனுப்பியிருந்தனர். மேலும், தங்களுக்கு பணம்அனுப்பினால் பங்குச் சந்தை யில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டி தருவதாக கூறினர். இதனை நம்பி பல்வேறு தவணையாக ரூ.34 லட்சம் அனுப்பியுள்ளார். லாபத்தொகை குறித்து கேட்ட போது, பணம் முதிர்வு அடைவதாக தெரிவித்தனர். பின்னர் லாபத்தொகையையும், பணத்தையும் திரும்பி கேட்டபோது, தராமல் மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து நட வடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும்,என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், செல்போன் எண்கள் மற்றும் பல்வேறு ஆன்லைன் தகவலின் அடிப்படையில், துடிய லூரைச் சேர்ந்த தனசேகரன், ஆந்திர மாநிலத்தைச்சேர்ந்த ரவி சந்துரு ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். மோசடி உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைதான இருவரிடமிருந்து பல்வேறு வங்கிகளின் நூற்றுக்க ணக்கான காசோலை புத்தகங்கள், கிரெடிட் கார்டுகள், ஏடிஎம் கார்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், பங்குச்சந் தையில் லாபம் பெற்றுத் தருவதாகக்கூறி தமிழ்நாடு, கர்நா டகா, ஆந்திரா, கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 152 பேரிடம் இதுபோன்று கோடிக்கணக்கில் பணமோ சடி செய்திருப்பது தெரியவந்தது. இதன்பின் இரண்டு பேரை யும் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கவுன்சிலரின் கணவர் மீது புகார்
கவுன்சிலரின் கணவர் மீது புகார் உதகை, ஆக.2- கேத்தி பேரூராட்சி கவுன்சிலரின் கணவர் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதி உரிமையாளர் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்துள் ளார். நீலகிரி மாவட்டம், கேத்தி பேரூராட்சி, உல்லாடா கிராமத் தைச் சேர்ந்த சுரேஷ் கல்லாடி வெள்ளியன்று மாவட்ட ஆட்சி யர் அலுவலத்தில் மனு ஒன்றை அளித்தார். அதில், கேத்தி பேரூராட்சி, 7 ஆவது வார்டுக்குட்பட்ட பகுதியில் எனக்கு சொந்தமான விடுதி உள்ளது. இந்நிலையில், அந்த வார் டின் கவுன்சிலராக உள்ளவரின் கணவர் ராஜேஷ் என்பவர், கட்டிடத்தில் விதிமீறல் உள்ளது எனக்கூறி என்னிடம் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டுகிறார். மேலும், கட்டிடத்தினுள் அத்துமீறி நுழைந்து கட்டிடத்தை வீடியோ பதிவு செய்து, கட்டிடத்தை ஆய்வு செய்ய தனக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதெனக் கூறி வருகிறார். இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை சிறையில் கைதி தற்கொலை
கோவை சிறையில் கைதி தற்கொலை கோவை, ஆக.2- கோவை மத்திய சிறையில் தண்டனை கைதி ஒருவர் தூக் கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மத்திய சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ள னர். இதில், கரூர் மாவட்டம், மன்மங்கலம் பகுதியைச் சேர்ந்த சிவா (48) என்பவர் தண்டனை கைதியாக சிறையில் அடைக் கப்பட்டிருந்த இவர், சிறையில் செயல்பட்டு வரும் புத்தக பைண்டிங் பிரிவில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், வியாழனன்று மதியம் புத்தக பைண்டிங் பிரிவில் உள்ள ஜன்னலில் துண்டை கழுத்தில் கட்டி தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்தார். இதைக்கண்ட அருகிலிருந்தவர் கள் சிவாவை மீட்டு, சிறையில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற னர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிவா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பந்தயசாலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மனித – விலங்கு மோதல்: வனத்துறை எச்சரிக்கை
மனித – விலங்கு மோதல்: வனத்துறை எச்சரிக்கை கோவை, ஆக.2- மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள குடியி ருப்புகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு, யானை – மனித மோதல் குறித்து வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள் ளனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள கோவை மாவட்டம், போளுவாம்பட்டி மற்றும் கோவை வனச்சரக பகுதி களான தொண்டாமுத்தூர், நரசீபுரம், அட்டுக்கல் பழங்கு டியினர் காலனி, விராலியூர், கெம்பனூர், மருதமலை, தடாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகள் தொடர்ந்து நடமாடும் முக்கியப் பகுதிகளாக உள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் அப்பகுதிகளுக்குச் சென்று விழிப்பு ணர்வை ஏற்படுத்தி அறிவுரைகளை வழங்கினர். அதில், ஊருக்குள் வரும் வனவிலங்குகள் பற்றி உடனடியாக வனத்து றைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வன விலங்குகளை தொந்தரவு செய்து அதனை விரட்ட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டாம். இரவு நேரங்களில் அதிகளவில் யானைகளின் நடமாட்டம் உள்ளதால் யானை - மனித மோதலை தடுக்கும் விதமாக பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பாம்பு கடித்து பாம்பு பிடி வீரர் பலி
பாம்பு கடித்து பாம்பு பிடி வீரர் பலி கோவை, ஆக.2- அதிக விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பை பிடிக்க வந்த வீரர், பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம், கணுவாய் பகுதியைச் சேர்ந்த பாம்பு பிடி வீரரான முரளிதரன் (35). இவருக்கு மனைவி, பள்ளியில் படிக்கும் ஒரு மகன் மற்றும் கல்லூரியில் படிக்கும் மகள் உள்ள னர். இந்நிலையில், வியாழனன்று இரவு காளப்பநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் பாம்பு புகுந் ததாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு உடனே சென்று அவர் பார்த்த போது அங்கு இருந்த மேஜையின் அடியில் சுமார் மூன்று அடி நீளம் கொண்ட கட்டுவிரியன் இனத்தைச் சேர்ந்த அதிக விஷம் கொண்ட பாம்பு இருப்பது தெரியவந்தது. அந்தப் பாம்பை லாவகமாக பிடிக்க முயன்றபோது, எதிர் பாராத விதமாக அவரை கடித்துள்ளது. அதனை பைக்குள் பிடித்து தூக்கி செல்ல முயன்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கி ருந்தவர்கள் இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ், வனத்துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், பாம்பு கடித்து ஐந்து நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திலே அவர் உயிரிழந்துவிட்டார். இதைத் தொடர்ந்து அங்கு வந்த வனத்துறை மற்றும் துடியலூர் காவல் துறையினர், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் வழக்கறிஞர் கொடூரக்கொலை
கோவையில் வழக்கறிஞர் கொடூரக்கொலை கோவை, ஆக.2- செட்டிபாளையம் அருகே வழக்கறிஞர் ஒருவரை அடை யாளம் தெரியாத நபர்கள், கொடூரமாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த உதயகுமார் (48) என்பவர் கோவையில் பல ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், வெள் ளியன்று பொள்ளாச்சி செல்ல திட்டமிட்டிருந்த உதயகுமார், தனது காரில் வீட்டை விட்டு புறப்பட்டார். ஆனால், செட்டிபா ளையம் அருகே உள்ள மைலேரிபாளையம் கோழிப் பண்ணை அருகே அவரது உடல் கிடப்பது கண்டுபிடிக்கப் பட்டது. அவரது கழுத்து மற்றும் மார்பில் பல காயங்கள் இருந் தன. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அடையா ளம் தெரியாத நபர்கள், காரில் வந்த உதயகுமாரை தடுத்து நிறுத்தி அவரை காரில் இருந்து இறங்கச் சொல்லி கோழிப் பண்ணை அருகே கொண்டு சென்று கத்திகளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தது தெரியவந்துள்ளது. பின்னர் அவரது காரை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். சூலூர் ஆய்வாளர் மாதையன் தலைமையிலான போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உதயகுமாரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த னர். தொடர்ந்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.பத்ரிநாராயணன் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து, கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைத்து, பல் வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவ தாக தெரிவித்துள்ளார்.
பருத்தி ஏலம்
பருத்தி ஏலம் திருப்பூர், ஆக.2- திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வியாழனன்று பருத்தி ஏலம் நடைபெற்றது. கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 387 விவசாயிகள் 4367 மூட்டைகளில் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 15 வணிகர்கள் ஏலத்தில் பங்கேற்றனர். இதில் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6200 முதல் ரூ.7839 வரை விற் பனையானது. மொத்தம் 1,516 குவிண்டால் பருத்தி, ரூ.1.04 கோடிக்கு ஏலம் போனது.
பூங்கா மைதானம் சீரமைப்புப் பணி சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை
உதகை, ஆக.2– உதகை அரசு தாவரவியல் பூங்காவிலுள்ள புல் மைதா னத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், சுற்று லாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடப்பாண்டு கோடை சீசன் கடந்த மே மாதம் முடிந்தது. செப் டம்பர் மாதம் நடக்க உள்ள இரண்டாவது சீசனுக்கு பூங்கா வில் விதைகள் சேகரிக்கப்பட்டு, தொட்டிகளில் விதைக்கப் பட்டு மலர் நாற்றுக்கள் தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், மலர் நடவு பணிகள், குளங் கள் உள்ளிட்டவை தூர்வாரி சுத்தம் செய்யப்பட்டு வருகின் றன. இந்நிலையில், பூங்காவிலுள்ள பிரதான புல் தரை மைதா னத்தில் புற்கள் அதிகளவில் வளர்ந்துள்ளதால், மைதானம் மூடப்பட்டு புற்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.