districts

img

மாடு மேய்க்க ஆடு கேட்கும் வனத்துறை: மலைவாழ் மக்கள் சங்கம் புகார்

உடுமலை, அக்.17– ஆழியார் அணைக்குள் மலைவாழ் மக் கள் பட்டி போட்டு மாடு மேய்ப்பதற்கு இடை யூறு செய்யும் வனத்துறை அதிகாரி மீது நடவ டிக்கையை எடுக்க வேண்டும், என மலை வாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் க.குப்புசாமி உடுமலை கோட்டாட்சியருக்கு அனுப்பி யுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: உடு மலைப்பேட்டை தாலுக்கா, மலைவாழ் மக் ்கள் குடியிருப்புகளான மாவடாப்பு மற்றும் காட்டுப்பட்டி செட்டில்மெண்ட் பகுதியில் இருந்து, வறட்சியான காலங்களில் ஆண்டு தோறும் ஆழியார் அணைக்குள் மலைவாழ் மக்கள் வளர்க்கும் மாடுகளை கொண்டு போய் பட்டி போட்டு அங்கேயே தங்கி மேய்ப் பது வழக்கம். இந்த ஆண்டு மூன்று மாதத் திற்கு முன்பிருந்து 20 குடும்பங்கள் ஆழியார் அணையின் கரையில் மாட்டுப்பட்டி அமைத்து அங்கேயே தங்கி பொதுப்பணித்துறைக்கு  சொந்தமான இடங்களில் மாடுகளை மேய்த்து வருகின்றனர்.

மழை அதிகம் பெய்து அணைக்கு தண்ணீர் வந்தால் குடியிருப்பு பகுதியில் தீவ னப்புல் வளர்ந்துவிட்டால் மாடுகளை செட் டில்மெண்ட் பகுதிக்கு கொண்டு போய் விடு வார்கள். இந்நிலையில், ஆனைமலை வனத்துறை யைச் சேர்ந்த வனக்காவலர் ஆனந்தராஜ்  என்பவர், இங்கு மாடுகளை மேய்க்கக் கூடாது என்று தொடர்ச்சியாக தகராறு செய்கிறார். இதற்குமுன் இதுபோன்ற பிரச்சனை ஏற்பட்ட போது, உடுமலை வருவாய் கோட்டாட்சியர் தலையிட்டு 2006ஆம் ஆண்டு வன உரிமை சட்டப்படி எங்கெல்லாம் தங்கி மாடுகளை மேய்த்தார்களோ அங்கெல்லாம் தங்கி மேய்ப் பதற்கு சட்டப்படி உரிமை உள்ளது என மலை வாழ் மக்களுக்கு ஆழியார் அணையில் மாடு களை மேய்க்க அனுமதியை பெற்றுக் கொடுத் தார். அதன்படி கடந்த 5 ஆண்டு காலமாக மாடுகளை மேய்த்துக் கொண்டுள்ளோம். அணையில் மாடுகளை மேய்க்க வரும்போது தாடக நாச்சியம்மன் சாமிக்கு நேர்ந்து சாமி கிடா விட்டு வளர்ப்பது வழக்கம். திரும்ப செல்லும்போது கிடா வெட்டி சாமி கும்பிட்டு விட்டுச் செல்வார்கள். ஆனால், நான்கு மாதத் திற்கு முன்பு இப்பகுதியில் வன காவலராக பெறுப்பேற்றுள்ள ஆனந்தராஜ் தொடர்ச்சி யாக மலைவாழ் மக்களிடம் தகராறு செய்து  மாடு மேய்க்கும் மக்களிடம் ரூ.5000 பணம் பெற்றுள்ளதாக தெரிகிறது, மேலும் மலை வாழ் மக்கள் வளர்க்கும் சாமி கிடாவான  ஆட்டுக்கிடாயை கேட்டும், ரூ.5000 பணம் கேட் டும் வருகிறார். சாமி கிடாவை கொடுக்க முடி யாது என தெரிவித்தவுடன் உடனடியாக இடத்தை காலி செய்ய வேண்டும் என்று சொல்லியுள்ளார்.

அதுசமயம் அங்கு குடியேறியவர்களின் இரண்டு குழந்தைகளுக்கு பெரியம்மை நோய் வந்துள்ளது. நோய் சரியானவுடன் நாங்கள்  சென்று விடுவோம் என்று சொல்லியும், அதெல் லாம் முடியாது உடனடியாக இடத்தை காலி  செய்ய வேண்டும் என்கிறார். இந்நிலையில், செவ்வாயன்று காலை 8 மணிக்கு 15 வேட்டை  தடுப்பு காவலர்களுடன் வந்து இந்த பகுதி யில் சந்தன கட்டை திருட்டு போய் உள்ளது. சந்தனை கட்டை கடத்தல்காரர்கள் உங்கள்  பெயரை சொல்லித்தான் இங்கு வருகிறார் கள். ஆகவே உங்கள் மீது சந்தன கட்டை கேஸ் போடுவேன். இன்று ஒருநாள் மட்டும் அவ காசம். நாளை இடத்தை காலி செய்ய வேண் டும் என்று மிரட்டியுள்ளார். அவர்களுடன் வந்த காவலர்களை போகச் சொல்லிவிட்டு தனி யாக மீண்டும் அங்குள்ள மக்களிடம், வளர்த் துள்ள சாமி கிடாயையும், ரூ.5000/- கொடுத் தால் இங்கேயே மாடுகளை மேய்க்கலாம். இல்லையென்றால் மாடுகளை ஓட்டிக் கொண்டு போங்கள் என்று கூறியுள்ளார்.  எனவே, கோட்டாட்சியர் தலையிட்டு பல் லாண்டு காலமாக பாரம்பரியமாக மாடுகளை மேய்க்கும் மலைவாழ் மக்கள் உரிமையை பாதுகாத்து அவர்களின் வாழ்வாதாரமாக உள்ள ஒரு பகுதி மாடு வளர்ப்பை ஆழியார் அணையிலே மேய்ச்சல் செய்ய உதவ வேண் டும். மலைவாழ் மக்கள் மீது வழக்கு தொடுப் பேன் என்று மிரட்டி வருபவர் மீது உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரி வித்துள்ளார்.