கோவை, டிச. 25- காலை எழுந்தவுடன் யாரை தாக் கலாம் என எந்த வனவிலங்குகளும் முடிவெடுப்பதில்லை. அதற்கு இடை யூறு ஏற்படும் போதே இத்தகைய மோதல் நடைபெறுகிறது என ஆனை மலை புலிகள் காப்பகத்தின் வன பாது காவலர் மற்றும் கள இயக்குனர் வெங்கடேஷ் தனது உரையில் தெரி வித்தார். கோவை இயற்கை பாதுகாப்பு சங்கம் சார்பில், வனவிலங்குகளின் அறிய புகைப்படங்கள் அடங்கிய 2025 காலண்டர் வெளியீடு, மனித - வன விலங்கு மோதல் குறித்த கருத்த ரங்கு மற்றும் வனவிலங்கு புகைப் பட கண்காட்சி விழா என முப்பெரும் விழா கோவை ஹோப் காலேஜ் அருகே கிளஸ்டர்ஸ் மீடியா கல்லூரி வளாகத்தில் செவ்வாயன்று நடை பெற்றது. இவ்விழாவிற்கு கோவை கிளஸ்டர்ஸ் மீடியா காலேஜ் தலை வர் மற்றும் நிர்வாக இயக்குனர் அர விந்தன் சௌந்தர்ராஜன் வரவேற் றார். இதில், ஆனைமலை புலிகள் காப் பகத்தின் வனப் பாதுகாவலர் மற்றும் கள இயக்குனர் வெங்கடேஷ் தலைமை தாங்கி பேசினார். அப் போது அவர் பேசுகையில், யானை உட்பட வன விலங்குகள் அனைத் தும் ஒரு பகுதியில் இருந்து இன் னொரு பகுதிக்கு இயற்கையாக புலம் பெயர்ந்து வரும். வனவிலங்கு கள் மனிதன் வசிக்கும் இடத்தை ஆக் கிரமிப்பு செய்வது இல்லை. நாம் தான் வனவிலங்கு பகுதியை ஆக் கிரமிப்பு செய்துள்ளோம். தமிழக எல்லை பகுதியில் தொடங்கி காருண்யா, கிருஷ்ணா கல்லூரி, ஈஷா யோகா மையம், மருதமலை, சைதன்யா மற்றும் ஐ.டி.நிறுவனங் கள், அரசுத்துறைகள் என பவானி சாகர் வனப்பகுதி வரை வனப்பகுதி ஆக்கிரமிப்புகள் உள்ளன.
இன்று பத்திரிகைகளை திறந் தாலே தினமும் மனிதன் மற்றொரு மனிதனை தாக்கும் செய்தி பிரதான மாக வந்து கொண்டே இருக்கிறது. ஆனால் வனவிலங்குகள் மனிதனை தாக்கியது என்ற செய்தி ஓரிரு செய்தி யாகத் தான் வருகிறது. இதனை மனி தர்கள் தாங்கிக்கொள்ள மறுக்கிறார் கள். வனவிலங்குகள் மனிதனை தாக்கி விட்டது. துரத்துகிறது, தொந்த ரவு செய்கிறது என்று தான் பேசுகிறார் கள். மனிதன் மனிதனை தாக்கி கொல் கிறான் என்றால் அவரை தண்டிக்க சட்டம் இருக்கிறது. ஆனால், வன விலங்கு மனித மோதலில் நாம் யாரை தண்டிப்பது? அதே சமயம் வன விலங்குகளை கற்களாலும் பட்டாசு கள் மூலமும் ஒருவித தாக்குதலை தொடுத்து விரட்டுகிறார்கள். ஒரு மனிதன் மற்றொரு மனிதனை தாக்கு கிறான் என்றால் அதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும். ஆனால், விலங்குகள் மனிதனை தாக்க என்ன காரணம்? வனவிலங்குகள் காலை யில் எழுந்தவுடன் இந்த மனிதனை தாக்கலாம் என்று திட்டமிட்டு வருவ தில்லை. வனவிலங்குகளுக்கு சுய ஒழுக்க கட்டுப்பாடு உள்ளதால் யாரையும் தாக்குவதில்லை. அரசு அனுமதியுடன் வனப்பகுதியில் தங்கி இருக்கும் மலைவாழ் மக்கள் வன விலங்குகளை போற்றுகிறார்கள். அவர்களை வனவிலங்குகள் தொந்த ரவு செய்வதில்லை. எப்படி மனித னுக்கு கோபத்தன்மை உள்ளதோ அதேபோல் விலங்குகளுக்கும் அந்த தன்மை வரும். அப்பொழுது தான் மனித வனவிலங்கு மோதல் ஏற்படு கிறது. மனிதன் வனவிலங்குகளை தொந்தரவு செய்வது மூலமும், வனப் பகுதியை ஆக்கிரமிப்பு செய்வதால் மட்டுமே வனவிலங்குகளுக்கு கோபம் ஏற்பட்டு தங்களை தற்காத் துக் கொள்வதற்காக மனிதன் மீது தாக்குதல் தொடுக்கிறது. அதனால் நாம் பொது மக்களுக்கு விழிப்பு ணர்வை ஏற்படுத்த வேண்டும். காட்டு பகுதிகளுக்குள்ளோ வனப்பகுதிக ளுக்குள்ளோ இடங்கள் வாங்காமல் மனிதன் வசிக்கும் பகுதியில் இடம் வாங்கி வசிக்கும் நிலைக்கு மக்கள் முன்வரவேண்டும் என்றார்.
இதனைத்தொடர்ந்து, பிளாக் ஷீப் அமைப்பின் நிர்வாக இயக்குன ரும் பிரபல தமிழ் நடிகர் மற்றும் சிரிப்பு நடிகருமான ஆர்.ஜே விக்னேஷ் காந்த் பேசுகையில், வனவிலங்கு களை புகைப்படம் எடுப்பது ஒரு மிகப் பெரிய கலை. வனவிலங்குகள் புகைப்படங்களாக எடுக்கப்படுவ தில்லை. அது அதாகவே அமைவது. வனவிலங்குகளை நாம் நினைக்கும் நேரத்தில் வேறு பகுதிக்கு அப்புறப் படுத்த முடியாது. துரத்தி அடிக்க முடி யாது. மனிதனை தாக்கும் பொழுது வனவிலங்குகளை வில்லனாக சித்தரிக்கிறார்கள். இங்கு பேசிய முக்கிய விருந்தினர்கள் அனை வரும் தங்களுடைய பல ஆண்டுகால அனுபவங்களை சுவாரசியமாக பகிர்ந்தார்கள். கோவை இயற்கை பாதுகாப்பு சங்கத் தலைவர் ஜலாலு தீன் யானை பாகனாக வாழ்வை தொடங்கி கடந்த 40 ஆண்டுகளாக வனவிலங்குகளுடன் பழகி ஒவ் வொரு விலங்குகளைப் பற்றியும் மக்களுக்கு எடுத்துரைப்பதுடன், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற் படுத்தியும், அதை எவ்வாறு பாது காக்க வேண்டும் என்பதை ஒரு அமைப்பாக ஏற்படுத்தியும் செயல் படுத்தி வருகிறார் என்றார். இதனைத்தொடர்ந்து வன விலங்குகளின் அறிய புகைப்படங் கள் அடங்கிய 2025 காலண்டரை விழா வில் பங்கேற்ற முக்கிய விருந்தி னர்கள் அனைவரும் வெளியிட்டனர். இதில், பொதுப்பணித்துறை கோவை மண்டல நிர்வாக பொறி யாளரும், வனவிலங்கு புகைப் படக் கலைஞருமான நித்தியன் மணி யரசு, வனவிலங்கு ஆராய்ச்சியாளர் மாரிமுத்து ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முடிவில் கோவை இயற்கை பாதுகாப்பு சங்கத் தலைவர் ஜலாலு தீன் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் திரளாக கலந்து கொண் டனர்.