ஸ்டெர்லிங் பயோடெக் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிஐடியு ஆர்ப்பாட்டம்
உதகை, ஜூன் 14- ஸ்டெர்லிங் பயோடெக் தொழிலாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என சிஐடியுவினர் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில், ஸ்டெர்லிங் பயோடெக் தொழி லாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட ஊதியத்தை உடனே வழங்கு வேண்டும். ஸ்டெர்லிங் பயோடெக் ஊழியர்களின் கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகம் அழைத்துப் பேச வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு நீலகிரி மாவட்டத் தலை வர் எல்.சங்கரலிங்கம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலா ளர் சி.வினோத் மற்றும் எஸ்பிடி தலைவர் ஆபிரகாம் விளக்கி பேசினார். சிஐடியு மாவட்டப் பொருளாளர் நவீன்சந்தி ரன் வாழ்த்தி பேசினார். இதில், ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர், மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இறுதியாக, நகராட்சி செயலாளர் சேகர் நன்றி கூறி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.
‘மணிமேகலை விருது’ பெற அழைப்பு
சேலம், ஜூன் 14- 2023 – 24 ஆம் ஆண்டிற்கான ‘மணிமேகலை விருது’ பெற விண்ணப்பிக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல் படும், கிராம ஊராட்சி பகுதிகளிலுள்ள சிறப்பாக செயல்படும் சுய உதவிக்குழுக்கள், பஞ்சாயத்து அளவிலான கூட்ட மைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புறங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்ட மைப்பு மற்றும் தொகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகி யோர்களுக்கு மணிமேகலை விருது வழங்கப்பட்டு வரு கிறது. இவ்விருது தேர்வுக்கான தகுதி அடிப்படையிலான தகுதிகள் மற்றும் 6 மதிப்பீட்டு காரணிகள் குறித்து, மாநில மற்றும் மாவட்ட அளவில், கிராம ஊராட்சி பகுதிக ளிலுள்ள சிறப்பாக செயல்படும் சுய உதவிக்குழுக்கள் ஆகியவை விருதிற்காக தேர்வு செய்யும் நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே 2023 – 24 ஆம் ஆண் டிற்கான விருதிற்கு தகுதியான மேற்கண்ட சமுதாய அமைப்பு களிடமிருந்து வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான முன்மொ ழிவுகளை ஜூலை 5 ஆம் தேதிக்குள் திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிர் திட்டம்), இரண்டாம் தளம், அறை எண்: 207 மாவட்ட ஆட்சியரகம், சேலம் 636001 என்ற முகவரியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
வண்டல் மண் எடுப்பதை கண்காணித்திடுக
உடுமலை, ஜூன் 14- விவசாய நிலங்களுக்கு தேவையான மண் எடுப்பதை அரசு உத்தரவிட்ட நிலையில், இதனை அதிகாரிகள் உறுதி செய்ய வேண் டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை மற்றும் மடத்துகுளம் பகுதி யின் விவசாயிகள் தங்கள் விளைநிலங்க ளுக்கு தேவையான வண்டல் மண்களை எடுக்க வட்டாச்சியர் இணைய வழியில் அனு மதி வழங்கப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது. கடந்தமுறை வண்டல்மண் எடுக்க விவசாய பயன்பாட்டிற்கு என்று வழங்கபட்ட அனுமதியில், இடைதரகர்கள் பல முறை கேட்டில் ஈடுபட்டனர். இதுபோன்று நடை பெறாமல், வருவாய்த்துறை மற்றும் பொது பணித்துறை அதிகாரிகள் மண் எடுக்கும் குளங்களில் தொடர் ஆய்வுகளை செய்ய வேண்டும். விவசாய பயன்பாட்டிற்குக் மட் டுமே மண்களை விவசாய நிலங்களில் பயன் படுத்த வேண்டும் என்ற உத்தரவை மீறுபவர் கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கன ராக வாகனங்களில் எடுத்த மண்களை சாலை களில் கொட்டாமல் இருக்கும் வகையில் தொடர் கண்காணிப்புகளை செய்ய வேண் டும். பல குளங்களில் அரசின் அனுமதியை மீறி கிராவல்மண்கள் எடுப்பதை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்து உள்ளனர்.