districts

img

3 பெண்கள் தங்க வளையல்கள் திருடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்

தாராபுரம், ஜூலை 15 - தாராபுரத்தில் தனியார் நகை கடையில் 3 பெண்கள் தங்க  வளையல்கள் திருடிய சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்க ளில் வைரலாக பரவி வருகிறது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அமராவதி சிலை அருகே  தயா கோல்ட் என்ற பெயரில் தயா என்பவர் தங்க நகைக்கடை  நடத்தி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று மதியம் 3  மணிக்கு 3 பெண்கள் நகை கடைக்கு வந்துள்ளனர். அவர்கள்  டாலர் வாங்குவதாக கூறி கடையில் இருந்த நகைகளை நோட் டமிட்டுள்ளனர். அப்போது எங்களுக்கு டாலர் பிடிக்கவில்லை  வளையல் காட்டுங்கள் என நகைக்கடை உரிமையாளரிடம் கேட்டுள்ளனர். அதற்கு நகைக்கடை உரிமையாளர் 12 கிராம்  எடையுள்ள இரண்டு தங்க வளையல்களை காண்பித்துள் ளார். அப்போது 3 பெண்களில் ஒருவர் தங்க வளையல்களை  கையில் அணிந்து கொண்டார். இரண்டு பெண்கள் வேறு டிசை னில் வளையல் காட்டுமாறு கடை ஊழியரை கேட்டுள்ளனர். வேறு தங்க வளையல்களை நகைக்கடைக்காரர் காண்பித் துள்ளார். அதே நேரத்தில் தங்க வளையல் அணிந்திருந்த ஒரு  பெண் கடையை விட்டு கிளம்பிச் சென்றுள்ளார்.

அதன்பிறகு  மீதம் இருந்த இரண்டு பெண்களும் தங்களுக்கு மாடல் எதுவும்  பிடிக்கவில்லை என கூறிவிட்டு கடையிலிருந்து சென்று விட் டனர். மூன்று பெண்களும் சென்றவுடன் கடை உரிமையா ளர் காண்பித்த தங்க வளையல்களை ஷோகேஸ் இல்  அடுக்கி வைத்த போது 12 கிராம் எடை கொண்ட இரண்டு  தங்க வளையல்கள் மட்டும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி  அடைந்த கடையின் உரிமையாளர் கடையில் பொருத்தப்பட் டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது மூன்று பேரும் நகை கடை உரிமையாளரை ஏமாற்றி தங்க  வளையல்களை திருடி சென்றது தெரியவந்தது.  இதையடுத்து திருடி சென்ற மூன்று பெண்களை தேடிச்  பார்த்துள்ளார். அவர்கள் எங்கும் கிடைக்கவில்லை. அதன்  பிறகு தனது கடையில் தங்க வளையல்கள் திருடு போன சிசி டிவி காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு நகைக்க டைக்காரர்கள் எச்சரிக்கையாக இருங்கள். எங்களது நகை  கடையில் மூன்று பெண்கள் தங்க வளையல்களை திருடி சென் றுள்ளனர் என பதிவிட்டார். இந்த வீடியோ தற்போது தாரா புரம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார் தங்க நகைக் கடை உரிமையாளரை நேரில் விசாரித்து வருகின்றனர்.