districts

பிளாஸ்டிக் போர்வையால் மூடப்பட்ட மலர் நாற்றுகள்

உதகை, ஜன.16- நீலகிரியில் கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ள நிலை யில், தாவரவியல் பூங்கா தொட்டி களில் வைக்கப்பட்டுள்ள மலர் நாற் றுக்கள் பாதிக்காமல் இருக்க பிளாஸ் டிக் போர்வை கொண்டு மூடப்பட்டுள் ளது. ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் நீர்பனி விழும். நவம்பர் இறுதி வாரம் முதல் பிப்ரவரி இறுதி வரையில் உறை பனி  விழும். ஆனால், இம்முறை மழை கார ணமாக கடந்த நவம்பர் மாதம் வரை பனிப்பொழிவு காணப்படவில்லை. கடந்த மாதம் துவக்கம் முதல் நீர்பனி யின் தாக்கம் காணப்பட்டது. கடந்த மாதம் இறுதி வாரம் முதல் பனிப் பொழிவு அதிகரித்துள்ளது. தற்போது மாவட்டத்தில் நாள் தோறும் உறை பனி காணப்படுகிறது. ஒரு சில நாட் கள் நீர்பனியும் விழுகிறது.  பனியின் காரணமாக தாழ்வான பகுதிகள் மற்றும் நீரோடைகளை ஒட்டி யுள்ள பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் உள்ள செடிகள் கருக  துவங்கின. தேயிலை, மலை காய் கறிகள் மற்றும் மலர் செடிகளை பனி யில் இருந்து பாதுகாக்க காலை மற்றும் மாலை நேரங்களில் ஸ்பி ரிங்லர் மூலம் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.  உதகை தாவரவியல் பூங்கா, மர வியல் பூங்கா, ரோஜா பூங்காக்களில் உள்ள அலங்கார செடிகள் மீது கோத் தகிரி மிலார் செடிகள் மூலம் மூடி பாதுகாக்கப்பட்டு வருகிறது. தாவரவி யல் பூங்காவில் உள்ள புல் மைதா னம் சேதமடையாத வகையில் புல்  மைதானத்திற்கு காலையில் பாப் அப் முறையில் தண்ணீர் பாய்ச்சும் பணி யில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வரு கின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நீலகிரியில் உறை பனி தாக் கம் மிக அதிகமாக காணப்படுகிறது. இத னால், பூங்கா தொட்டிகளில் நடவு  செய்யப்பட்டுள்ள மலர் நாற்றுக்கள்  பாதிக்காமல் இருக்க பிளாஸ்டிக்  போர்வை கொண்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. பனியின் காரணமாக உதகை மற்றும் சுற்று வட்டார பகுதி களில் கடும் குளிர் நிலவுகிறது. பனிப் பொழிவு அதிகரித்துள்ள நிலையில், அதிகாலை நேரங்களில் குளிர் வாட் டுகிறது. பகல் நேரங்களில் வெயில் வாட்டினாலும், நிழல் தரும் இடங்க ளுக்கு சென்றால் குளிர் நிலவுகிறது.