உடுமலை, நவ.13- பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டுள்ளது. இதனால் அமண லிங்கேஸ்வரர் கோயிலை காட்டாறு வெள்ளம் சூழந் துள்ளது. திருப்பூர் மாவட்டம், உடு மலை அருகே உள்ள திரு மூர்த்தி மலை மீது அமண லிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அருவியில் ஏற் பட்ட வெள்ளப் பெருக்கால் அமணலிங்கேஸ்வரர் கோயிலை காட்டாற்று வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து பஞ்ச லிங்க அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணி கள் அருவியில் குளிக்க முடி யாமல் ஏமாற்றம் அடைந் தனர்.