districts

img

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு

கோவை, ஜூலை 11- வால்பாறையை அடுத்த அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியின் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டுள்ளதால், அங்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த கேரள  எல்லையளான அதிரப் பள்ளி பகுதியில் உள்ள நீர் வீழ்ச்சியில், கடந்த சில நாட் கள் பெய்த கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நீர் வீழ்ச்சியானது புன்னகை மன்னன் என்ற தமிழ் திரைப்படத்தில் மூலமாக, தமிழக - கேரள எல்லைப் பகுதியில் உள்ள  மக்களுக்கு அறிமுகமானது. இப்பகுதியில்  வால்பாறை சோலையார் அணையிலிருந்து  திறந்து விடப்படுகின்ற தண்ணீர் மற்றும் அதனை சுற்றியுள்ள மலைகளில் பெருக் கெடுத்து வரும் ஆற்றுத் தண்ணீர் அதிரப் பள்ளி நீர்வீழ்ச்சியை அடைகிறது. இத னால் அதிகளவில் கரைபுரண்டு ஓடும் வெள்ள பகுதியை சுற்றிப் பார்ப்பதற்கு  சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.