உடுமலை, டிச.21- அமராவதி அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால், ஆற்றின் கரையோ ரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், எதிர்வரும் நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ள தால் அரசு கட்டிடங்களை பராமரித்து வைக்க வேண்டும் என கோட்டாட்சியர் தெரிவித்துள் ளார். உடுமலை அருகேயுள்ள அமராவதி அணையின் மூலமாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங் கள் பாசன வசதி பெற்று வருவதுடன், ஆற் றின் வழியோர கிராமங்களுக்குக் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. இந்த அணையிலிருந்து கடந்த மாதம் பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக் கட்டு பாசன நிலங்களிலுள்ள நிலைப்பயிர் களை காப்பதற்காகவும், பொது மக்களின் குடிநீர் தேவைக்காகவும் அணையிலிருந்து உயிர் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் அமராவதி அணை நீர் பிடிப்பு பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பருவ மழை தீவிரமடைந் துள்ளதால், அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து முழு கொள்ளளவை எட்டியுள் ளது. கடந்த இரண்டு தினங்களாக கேரளா வில் உள்ள மூணாறு, தலையாறு, மறையூர் பகுதியில் கனமழை பெய்து அணையின் பிர தான நீர்வரத்து ஆறான பாம்பாற்றின் மூலம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. தற்பொ ழுதைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் மொத்தமுள்ள 90 அடியில் 89.18 அடியாக உள்ளது. மேலும் அணைக்கு நீர்வரத்து வினா டிக்கு 1392 கன அடியாக உள்ளது. இதனை யடுத்து கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. மேலும், 21 ஆம் தேதி காலை நிலவரப்படி, அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1392 அடி யாகவும், அணையின் நீர்மட்டம் 89.18 அடியா கவும் இருந்தது. இதனையடுத்து, பாது காப்பு கருதி அணையிலிருந்து 1500 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதில், பிரதான கால்வாயில் 400 கன அடி நீர் திறக் கப்பட்டு வருகிறது. இது குறித்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில் அணைக்கு நீர் வரத்தைக் கணக்கில் கொண்டு தண்ணீர் திறப்பு இருக்கும் என்றார் கள். கன மழைக்கு வாய்ப்பு: இந்நிலையில், உடுமலைப்பேட்டை வட் டத்தில் எதிர்வரும் 26 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள் ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே உடுமலைப்பேட்டை கோட்டத்தில் இருக்கும் அனைத்து அரசுப் பள்ளிகளின் சாவிகளையும் உள்ளூரில் உள்ள பள்ளி சார்ந்த அரசுப் பணியாளர்கள் வசம் ஒப்ப டைக்கவும், இல்லை எனில் அரசு கட்டிடங் களின் சாவி வைத்து உள்ள நபர்களின் விவ ரத்தினை அந்தந்த கிராம நிர்வாக அலுவ லர்களிடம் தெரிவிக்குமாறு அனைத்து தலைமையாசிரியர்களும் உடுமலை வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.