அவிநாசி,டிச.25- வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களின் மக்களுக்கு உதவும் வகையில் அவிநாசி பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள் ரூ.15 ஆயிரம் மதிப்பிலான அரிசி மூட்டைகள் வழங்கியுள்ளனர். தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடியில் மழை யினால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில், அவிநாசியை சேர்ந்த சமூக அமைப்புகள் தனியார் மண்டபத்தில் பொருட்களை சேகரித்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு அனுப்ப முடிவு செய்திருந்த னர். இதில், அவிநாசி பேரூராட்சியில் பணியாற்றும் 150-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் சார்பில் சுகாதார பணியா ளர்கள் மாதையன், சங்கர், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவும் வகையில் ரூ.15 ஆயிரம் மதிப்பிலான 50 அரிசி சிப்பங்களை சமூக அமைப்பின் நிர்வாகிகள் சாய் கண்ணன், ரவிக்குமார், செந்தில், பழனிச்சாமி மகேந்திரன், உள்ளிட்டோ ரிடம் வழங்கியுள்ளனர்.