கீழ்பவானி வாய்க்காலின் கடை மடையான திருப்பூர் மாவட்டம், முத்தூர் அருகே உள்ள மங்களப்பட்டியில், பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் வந்ததைத் தொடர்ந்து கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபட்டு, வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்தனர்.