districts

img

முன்னாள் மாணவர்கள் சந்தித்த நெகிழ்வு

கோவை, பிப். 3- முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் கால்  நூற்றாண்டுக்குப் பிறம் பள்ளிக்கு வருவது போல சீருடை அணிந்து வந்த முன்னாள்  மாணவர் அனைவரையும் வெகுவாக கவர்ந் தார். கோவை வின்சென்ட் ரோடு கோட்டை மேடு பகுதியில் அமைந்துள்ள நல்ல ஆயன்  உயர்நிலைப் பள்ளியில் 1980 ஆம் ஆண்டு  முதல் 1990 - 1991 ஆம் ஆண்டு வரை ஒன்றாம்  வகுப்பு  முதல் பத்தாம் வகுப்பு வரை படித்த  முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சனியன்று  கோவை போத்தனூர் சாலையில் உள்ள  தனியார் திருமண மண்டபத்தில்  நடைபெற் றது. இதில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு  படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்றுகூடி  சந்தித்துக்கொண்ட சம்பவம், அங்கிருந்தவர் களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு வருக்கொருவர் அடையாளம் காண முடியா மல் பள்ளி காலத்தில் நடைபெற்ற நினைவு களை பகிர்ந்து கொண்டு, நட்பை பாசத்தோடு  புதுப்பித்துக் கொண்டனர். மேலும் இந்நி கழ்ச்சியில் 1990 ஆம் ஆண்டு படித்த கார்த்தி  என்ற கூடலூரை சேர்ந்த முன்னாள் மாணவர்,  பள்ளி நாட்களை நினைவுபடுத்தும் வகையில்  அன்றைய காலகட்ட பள்ளி சீருடையான காக்கி அரைக்கால் டவுசர் வெள்ளைநிற சட்டை அணிந்து பள்ளிக்கு வருவது போல்  நிகழ்ச்சி நடந்த அரங்கிற்குள் வந்து மேடை யில் அமர்ந்தது அனைவரையும் வெகுவாக கவர்ந்தார். மேலும் இதில் கோவை மாநகர துணை காவல் ஆணையாளர் சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி மாணவர்கள் அரசு  நிர்வாகத்தோடு இணைந்து பல்வேறு மக்கள்  நலப் பணிகளிலும் ஈடுபட வேண்டும் என்று மாணவர்களை கேட்டுக் கொண்டதுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண் டார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரை யாற்றிய பள்ளி ஆசிரியர்கள் மிகவும் நெகிழ்ச்சியோடு நினைவில் நின்ற நினைவு களை மேடையில் பகிர்ந்து கொண்டனர். இதில்  பள்ளி தலைமை ஆசிரியர் பிளமின் மரிய ஜோசப் உள்ளிட்டோர் ஆசிரியப் பெரு மக்கள் ஏராளமான கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்தினார்கள்.