திருப்பூர், டிச. 11- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மடத்துக்குளம் கிளை யின் சார்பில் பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ஐம் பெறும் ஆளுமைகள் விழா நடைபெற்றது. இந்த விழா வில் வானவில் என்ற பெயரில் மின்னிதழ் வெளி யிடப்பட்டது. மடத்துக்குளம் சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழா விற்கு கடத்தூர் ஜெயராமன் தலைமை தாங்கினார். வி.ராஜரத்தினம் வரவேற்றார். ஆர்.பன்னீர்செல்வம் உயிர் காற்று என்கிற நூலை அறிமுகம் செய்து வைத்து பேசினார். உயிர் காற்று நூல் எழுதிய கொடுப்பனை ஏற்புரையாற்றினார். மகா கவி பாரதி குறித்து தெய்வானை, பாவேந்தர் குறித்து கொழுமம் ஆதி, கவிஞர் தமிழ் ஒளி குறித்து இளைய பாரதி, மக்கள் கவிஞர் குறித்து சு.சுப்ரமணியம், பால சரஸ்வதி குறித்து தோழன் ராசா ஆகியோர் கருத் துரை ஆற்றினர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்ட பொரு ளாளர் ராமசாமி வாழ்த்தி பேசினார். மாவட்ட செயலாளர் இரா.குமார் வானவில் மின் இதழை வெளியிட்டார். அந்த நூலை ஆசிரியர் ராமதுரை பெற்றுக் கொண்டார். மின் இதழை வாட்ஸ் அப் குழுக்களுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்வை மாவட்ட செய லாளர் இரா.குமார் வெளியிட்டார். பாடகர் சிவக்குமார் பாடல்கள் பாடினார். இந்த நிகழ்ச்சியை பஞ்சலிங்கம் தொகுத்து வழங்கினார். நிறைவாக எம். கருணாநிதி நன்றி கூறினார்.