districts

img

முதல் டிவிசன் கால்பந்து போட்டி: எம்ஆர்சி அணி சாம்பியன்

உதகை, பிப்.19- உதகையில் நடைபெற்ற முதல் டிவி சன் கால்பந்து போட்டியில் எம்ஆர்சி அணி சாம்பியன் பட்டம் வென்றது. நீலகிரி மாவட்ட கால்பந்து சங்கம்  மூலம் நடத்தப்படும் முதல் டிவிசன் கால் பந்து போட்டிகள் செப்டம்பர் மாதம் தொடங்கியது. ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட் டும் தலா 2 என 4 போட்டிகள் நடைபெற் றது. இதில் மொத்தம் 90 போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகள் அனைத்தும் தாவரவியல் பூங்கா அரு கில் உள்ள எச்ஏடிபி திறந்தவெளி மைதா னத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலை யில், முதல் டிவிசன் போட்டிகள் முடி வில் எம்ஆர்சி அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதுகுறித்து கால்பந்து சங் கத்தின் நிர்வாகிகள் கூறுகையில், நீல கிரி மாவட்டத்தில் 3 டிவிசன் போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதல் டிவிசன் போட்டியில் 11 அணிகள் பங்கு பெற்றன. இனி நடக்கப்போகும் இரண்டாவது டிவிசனில் 16 அணிகளும், மூன்றாவது டிவிசனில் 10 அணிகளும் கலந்து கொள்ள உள்ளது. முதலாவது டிவிசன்  போட்டி முடிவில் எம்ஆர்சி அணி 30 புள் ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் வென் றுள்ளது. இதன்மூலம் தமிழ்நாடு கால்பந்து சங்க மூலம் நடக்கும் மாநில அளவி லான போட்டியில் கலந்து கொள்ள எம்ஆர்சி அணி தகுதி பெற்றுள்ளது. மேலும், முதல் டிவிசனில் கடைசி இடத்தை பிடிக்கும் 2 அணிகள் இரண் டாவது டிவிசனுக்கு சென்று விடும். இதே போல் பெண்களுக்கான போட்டிகளும், 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான முதல் டிவிசன் போட்டிகளும் நடந்து  வருகிறது, என்றனர். இதையடுத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு நீலகிரி மாவட்ட கால்பந்து சங்க தலைவர் மணி, செயலாளர் மோகன முரளி, பொருளா ளர் நாகராஜ் ஆகியோர் வாழ்த்து தெரி வித்தனர்.