விசைத்தறி கூடத்தில் தீ விபத்து ரூ.2 கோடி மதிப்பிலான விசைத்தறி சேதம்
கோவை, செப்.15- கருமத்தம்பட்டி அருகே நவீன விசைத்தறி கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான விசைத் தறிகள் எரிந்து சேதமானது. கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே உள்ள வேட்டைக்காரன் குட்டை பகுதியில் பழனிசாமி என்பவருக்கு சொந்தமான நவீன விசைத்தறி கூடம் உள்ளது. இங்கு நூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின் றனர். இந்நிலையில், நவீன ஜெட் தறி கூடத்தில் வியாழ னன்று இரவு வழக்கமாக தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது விசைத்தறி கூடத்தின் மேற்கு பகுதியில் திடீரென மின் கசிவு ஏற்பட்டு தீ பிடித்தது. இதனையடுத்து, அங்கிருந்த தொழிலாளர்கள் வெளியேறினர். இது குறித்து அவிநாசி மற்றும் சூலூர் தீயணைப்பு துறை யினருக்கு தகவல் அளித்தனர். சூலூர் தீயணைப்பு நிலைய அதிகாரி வேலுச்சாமி தலைமையிலான தீயணைப்பு துறையில் அங்கு வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும், தீ விபத்தில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான 3 நவீன விசைத்தறிகள் எரிந்து முற்றிலும் சேதமானது. மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த நூல் பண்டில்கள் என ஒரு கோடி மதிப்புள்ளான பொருட்களும் தீயில் எரிந்து சாம்ப லானது. இதுகுறித்து விசைத்தறி கூடத்தின் மேலாளர் லோகநாதன் கூறுகையில், தொழிலாளர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த தீ விபத்து ஏற்பட்டது. தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறி உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதை அடுத்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் இந்த விபத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான விசைத்தறி மற்றும் ஒரு கோடி மதிப்புள்ளான மூலப் பொருட்கள் எரிந்து சேதமாகி உள்ளது என தெரிவித் தார். இந்த விபத்து குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.
செப்.24ல் பனை விதைகள் நடும் பணி துவக்கம்
ஈரோடு, செப்.15- செப்.24 ஆம் தேதியன்று தமிழ்நாட்டில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி துவங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு பனை தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் எர் ணாவூர் நாராயணன் சத்தியமங்கலத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ் நாட்டில் 15 கோடி பனை மரங்கள் இருந்தன. தற்போது 5 கோடி மரங்கள் மட்டுமே உள்ளன. 10 கோடி மரங்கள் பல்வேறு பயன்பாட்டுக்காக வெட்டப்பட்டன. இதனை 15 கோடியாக உயர்த்த வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார். அதன்பேரில் கடற் கரையில் அமைந்துள்ள 14 மாவட்டங் களில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணா நிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஒரு கோடி பனை விதைகள் நடும் நிகழ்ச்சி வரும் செப்.24 ஆம் தேதியன்று துவங்கப் பட உள்ளது. தற்போது 50 லட்சம் பனை விதைகள் வரப்பெற்றுள்ளன. ஈரோடு மாவட்டத்தி லிருந்து 5 லட்சம் பனை விதைகள் தருவதாக கூறியுள்ளார்கள். கடந்த 10 ஆண்டுகளாக பனை தொழிலாளர்கள் நல வாரியம் செயல் படாமல் இருந்து வந்தது. தற்போது வாரியம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது, என்றார்.
மேச்சேரி அருகே காவலர் தற்கொலை
சேலம், செப்.15- சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த மேச்சேரி, மல்லி குந்தம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூலி தொழிலாளி சின்ராஜ் - அமுதா தம்பதியினர். இவர்களுடையே மகன் அன்புராஜ் (21) சென்னை, ஆவடியில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். இதனிடையே அன்புராஜ் ஒரு மாத மருத்துவ விடுப்பில் கடந்த ஆக.30 ஆம் தேதியன்று சொந்த ஊரான மல்லிகுந்தத்திற்கு வந்தார். இந்நிலையில், வியாழ னன்று தனியாக அறையிலிருந்த காவலர் அன்புராஜ், அரளி விதையை அரைத்து குடித்து திடீரென தற்கொலை முயற்சி யில் ஈடுபட்டார். இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஓமலூரில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு கொண்டு சென்றனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக மேச்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து அன்புராஜின் சடலத்தை பிரேத பரிசோத னைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர். இந்நிலையில், அன்புராஜ் எழுதி வைத்த்திருந்தாக கடிதம் ஒன்றை காவல் துறையினர் கைப்பற்றி, தீவிர விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தடையை மீறி பேருந்து தின கொண்டாட்டம்
கோவை, செப்.15- தடையை மீறி பேருந்து தின கொண்டாட்டத்தின் போது சாலை யில் பட்டாசு வெடித்து நடனமாடிய கல்லூரி மாணவர்களால் மற்ற பயணிகள் அவதிக்குள்ளாகினர் வழக்கமாக கல்லூரி செல்லும் மாணவர்கள், தங்கள் பயணிக்கும் பேருந்துகளில் பூக்கள் மற்றும் பலூன்களால் அலங்கரித்து முன் பக்கம் மாலைகளை தொங்கவிட்டு பேருந்து தின (பஸ் டே) கொண்டாடு வார்கள். பேருந்தில் ஏறி தாரைப் தப் பட்டை முழங்க, ஆக்ரோஷமாக கத்துவார்கள். பேருந்து அவர்கள் வழக்கமாக கல்லூரி செல்லும் பாதை யில் பயணிக்கும். இதனால் மாணவர் கள் என்னதான் உற்சாகம் அடைந் தாலும் இதர பயணிகள் படும் அவதி ஆத்திரத்தையே வரவழைக்கும். இதோடு மட்டுமில்லாமல் பல சமயங்களில் ‘பஸ் டே’ கொண்டாடும் மாணவர்களுக்கு இடையே பிரச் சனை ஏற்பட்டு மோதலில் முடிந் திருக்கின்றன. மகிழ்ச்சியை தாண்டி இது போன்ற கொண்டாட்டங்களில சிரமங்களும் இருக்கவே செய் கின்றன. பல்வேறு பிரச்சினைகளை கருத்தில் கொண்டு கல்லூரி மாண வர்கள் பஸ் டே கொண்டாட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித் துள்ளது. தடையை மீறும் மாணவர் களை கைது செய்யவும் உயர்நீதி மன்றம் தன் உத்தரவில் கூறியுள் ளது. இந்நிலையில், தடையை மீறி கோவையைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள், அவினாசி சாலையில் திருப்பூர் செல்லும் தனி யார் பேருந்தில் பஸ் டே கொண் டாடிய காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சாலைகள் பரபரப்பாக காணப்படும் காலை வேளையில் பேருந்து பயணி கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், அலங்கரிக்கப்பட்ட பேருந்துக்கு முன்பாக தாரை தப்பட்டைகள் முழங்க சினிமா பாடலுக்கு குத் தாட்டம் போட்ட மாணவர்கள், கணி யூர் சுங்கச்சாவடி அருகே பேருந்தை நிறுத்தி ஆட்டம் பாட்டத்துடன், கேக் வெட்டியும், பட்டாசுகள் வெடித்தும், அதனை போட்டோ மற்றும் வீடியோ எடுத்தும் மகிழ்ச்சியை வெளிப் படுத்தினர். அப்போது கல்லூரி மாண வர் ஒருவர் ஆர்வ மிகுதியால் பேருந் தின் மீது ஏறி மாணவர்களின் குத்தாட்டத்தை செல்போனில் படம் பிடித்த சம்பவமும் அரங்கேறியது. இது தொடர்பான வீடியோ பேஸ் புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலைதளங்களில் பரவி வருகிறது. பஸ் டே கொண்டாட்டங்களுக்கு தடை அமலில் உள்ள நிலையில், கடந்த சில ஆண்டுகளாக கோவை யில் பஸ் டே கொண்டாடும் கலாச் சாரம் தலை தூக்கி வருவதாக கூறும் பேருந்து பயணிகள், பஸ் டே கேளிக்கை கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளித்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் உரிமையாளர் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுக்கின் றனர்.
தாராபுரம் ஐடிஐயில் சேர 23 ஆம் தேதி கடைசி நாள்
தாராபுரம், செப்.15 - தாராபுரத்தில் இயங்கி வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்பிரிவுகள் மற்றும் இதர தொழிற்பிரிவு களில் உள்ள காலியிடங்களுக்கு நேரடி சேர்க்கை நடை பெற்று வருகிறது. ஐடிஐயில் பயிற்சி பெறுபவர்களுக்கு தர மான பயிற்சி வழங்கபடுவதுடன், தமிழ்நாடு அரசின் விலை யில்லா சைக்கிள் மற்றும் குறிப்பிட்ட சில தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு டூல்கிட், தையல் எந்தி ரம் விலையில்லாமல் வழங்கப்படும். ஆண் பயிற்சியாளர் களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.750 மற்றும் தகுதி வாய்ந்த பெண் பயிற்சியாளர்களுக்கு புதுமைப்பெண் திட்டத் துடன் இணைந்து மாதாந்திர உதவித்தொகை ரூ.1750 வழங் கப்படும். பயிற்சி முடித்தவர்களுக்கு இன்டன்ஷிப் பயிற்சி மற்றும் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை சம்பளத்துடன் முன் னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தரப்படும். விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் தாரா புரம், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் சேர்க்கை உதவி மையத்தில் வருகிற 23 ஆம் தேதி வரை நேரில் விண்ணப்பிக் கலாம். இதுகுறித்து மேலும் விபரங்களுக்கு 04258 230307 என்ற தொலைபேசிக்கு தொடர்பு கொள்ளலாம். இத்தக வலை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் பிரபு தெரி வித்துள்ளார்.
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா
அவிநாசி, செப்.15 – அவிநாசியில் அருகே பெரியாயிபாளையம் பகுதியில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு திமுகவினர் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர். செப்.15 தமிழகம் முழுவதும் பேரறிஞர் அண்ணா பிறந் தநாள் விழா கொண்டாடப்பட்டது. அவினாசி ஒன்றியம், பழங் கரை ஊராட்சிக்குட்பட்ட பெரியாயிபாளையம் பகுதியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு, அப் பகுதி யைச் சேர்ந்த திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல தமிழக முதல்வர் பெண்களுக்கு அறிவித்துள்ள ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை திட்டத் தையும் வரவேற்று கொண்டாடினர்.. அதேபோல அவிநாசி பேரூராட்சி பகுதியில் புதிய பேருந்து நிலையம் முன்பு அண் ணாவின் உருவப்படத்திற்கு பேரூராட்சி தலைவர் தனலட்சுமி பொன்னுச்சாமி, பேரூராட்சி கவுன்சிலர் உட்பட பலர் மரி யாதை செலுத்தினர்.
காங்கேயம் அரசுப் பள்ளி அருகே வைத்துள்ள மதவாத பெயர்ப் பலகையை அகற்றக் கோரிக்கை
திருப்பூர், செப். 15 - காங்கயத்தில் அரசுப் பள்ளி முன்பு மத உணர்வைத் தூண் டும் வகையில் வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகை மற்றும் கொடிக் கம்பத்தை அகற்றுமாறு திராவிடர் கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து திராவிடர் கழகத்தின் காங்கயம் நகரத் தலை வர் பெ.மணி வேலு, காங்கயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை கொடுத்துள்ள மனுவில், காங்கேயம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு இந்து ஆட்டோ தொழிலாளர் முன் னணி சங்கம் என்னும் பெயரில் பெயர்ப் பலகையும், கொடிக் கம்பமும் வைத்துள்ளனர். இது மதச்சார்பின்மைக்கு எதிராகவும், நாளடைவில் மாணவர்கள் மத்தியில் மிகுந்த மத வேற்றுமையை உண்டாக்கி விடும் அபாயமும் உள்ளது. எனவே, சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக மத உணர்வைத் தூண்டும் வகையில் வைக்கப்பட்டுள்ள பெயர்ப்பலகை, கொடிக் கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என கேட்டுக் கொண்டுள்ளனர்.
தபால்நிலைய சேவை நேரம் நீட்டிப்பு: மக்கள் வரவேற்பு
தாராபுரம், செப்.15- தாராபுரம் தலைமை தபால் நிலையம் இரவு 8 மணி வரை செயல்பட துவங்கி யுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் வர வேற்பை பெற்றுள்ளது. தாராபுரம் தலைமை தபால் நிலையம் புதிய காவல்நிலையம் அருகில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் வச திக்காக காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட துவங்கியுள்ளது. சேமிப்பு கணக்கு, ஆர்.டி உள்ளிட்ட சேவைகள் இரவு 8 மணி வரையும் சாதாரண தபால் மற்றும் ரிஜிஸ் டர் போஸ்ட் இரவு ஏழரை மணி வரையிலும் சேவை வழங்கப்படுகிறது. இந்த வசதி பொது மக்களிடையே அமோக வரவேற்பை பெற் றுள்ளது. இதுகுறித்து தாராபுரத்தை சேர்ந்த வழக் கறிஞர் மங்கையர்கரசி தெரிவிக்கையில், இரவு ஏழரை மணி வரை ரிஜிஸ்டர் போஸ்ட் அனுப்பலாம் என்பது பொதுமக்களுக்கு மிகப்பெரிய சவுகரியம். வேலைக்குச் செல் லும் பெண்கள் மாலை வேலை முடிந்து வீட் டிற்கு வந்த பிறகு வங்கியில் சென்று பணம் போடவோ, எடுக்கவோ இயலாது. தபால் நிலையத்தில் இரவு 8 மணி வரை இந்த சேவை உள்ளதால் வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் அனைவருக்கும் மிகவும் வசதியாக இருக்கும். மேலும் வேலைக்கு விண்ணப்பங்கள் அனுப்பும்போது கல்லூ ரியில் மாணவர்கள் பகல் 4 மணிக்கே சாதா ரண போஸ்ட் அனுப்பும் நேரம் முடிந்து விடு கிறது. தற்போது இரவு ஏழரை மணி வரை நீடித் துள்ளதால் விண்ணப்பிப்பவர்களால் மிக வும் எளிதாகவே அனுப்ப இயலும். மேலும் மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் பெயில் ஆர்டர் 4 மணிக்கு பெற்று அதை கோவை மத்திய சிறைக்கு தாராபுரத்திலிருந்து அதே நாளில் அனுப்ப இயலாது. திருப்பூர் தலைமை தபால் நிலையம் சென்று அனுப்ப வேண்டும். நேரம் அதிகரிப்பு கோர்ட் நடைமுறைக்கும் ஏற்றது. இவ்வாறு இந்த சேவை நேரம் மாற்றம் செய்யப்பட்டது அனைத்தும் தரப்பினரிட மும் வரவேற்பை பெற்றுள்ளது.
பேரிடர் கால மீட்புப் பணி: கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி
திருப்பூர், செப். 15 - பேரிடர் காலத்தில் எவ்வாறு செயல்படவேண்டும் என்று சிக்கண்ணா அரசுக் கலைக் கல்லூரி மாணவர்களுக்கு தீய ணைப்பு மீட்புப் பணித் துறையினர் பயிற்சி அளித்தனர். கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் வெள்ளி யன்று தீயணைப்பு நடவடிக்கை செயல்முறை விளக்கம் நடை பெற்றது. நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப் பாளர் மோகன் குமார் முன்னிலையில், கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை ஏற்றார். மாவட்ட தீயணைப்பு நிலைய உதவி அலுவலர் வீரராஜ் சிறப்புரை ஆற்றினார். வெள்ள அபாய பேரிடர் காலங்களில் எவ்வாறு பாது காப்பாக இருப்பது, தீப்பற்றிய இடத்தில் இருந்து மக்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும், பேரிடர் காலங்களில் எப்படி தப்பித்துக் கொள்வது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை செயல்முறை விளக்கமாக பயிற்சியளிக்கப்பட் டது.தீயணைப்புத் துறையினர், மாணவர்கள், கல்லூரி பேரா சிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
லாரி மோதி விபத்து: விவசாயி பலி
தாராபுரம், செப்.15- தாராபுரம் அடுத்துள்ள தொப்பம்பட்டியை சேர்ந்தவர் குப்புசாமி (73) விவசாயி. இவர் தாராபுரம் - திருப்பூர் சாலை யில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். குண்ட டத்தை அடுத்த சூரியநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகே இருந்து காஞ்சிபுரம் சாலையில் செல்வதற்காக திரும்பிய போது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த லாரி குப்புசாமி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த குப்புசாமியை அக்கம்பக்கம் இருந்தவர்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்த னர். இதுகுறித்து குண்டடம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவர்களை தாக்கிய ஆசிரியர்: பள்ளி முற்றுகை
கோவை, செப்.15- தனியார் பள்ளி மற்றும் அரசுப்பள்ளி ஆகியவற்றில் மாணவர்களை ஆசிரியர்கள் தாக்கியதாக எழுந்த புகாரையடுத்து, பெற் றோர்கள் பள்ளியை முற்றுகையிடட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை. கவுண்டம்பாளையத்தில், அபி எஸ்.ஆர்.லீடர்ஸ் என்கிற பள்ளி இயங்கி வரு கிறது. இந்த பள்ளியில் மற்றொரு பிரிவாக உள்ள பாலர் பள்ளியின் யுகேஜி படிக்கும் மாணவர்கள், பக்கத்து மாணவர்களிடம் பேசி னார்கள் என்பதற்காக, பள்ளியின் முதல்வர் ஜீவ சாந்தி என்பவர் குழந்தைகளை அடித்த துடன், தலைமுடியைப்பிடித்து தூக்கி ஆட்டி யுள்ளார். இதற்கு அடுத்தநாள் குழந்தைகள் பள்ளிக்கு போக மாட்டேன் என வீட்டில் அழுது அடம்பிடித்துள்ளனர். பெற்றோர்கள் பொறுமையுடன் கேட்ட பிறகு, அடித்ததை யும், தலை முடியை பிடித்து ஆட்டியதையும் பயந்து கொண்டே தெரிவித்துள்ளனர். இ தனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், 10க்கும் மேற்பட்டோர் பள்ளியில் சென்று நியாயம் கேட்டுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், எல்கேஜி, யுகேஜி படிக்கும் குழந்தைகளுக்கு என்ன தெரியும், பக்கத்தில் உள்ள குழந்தை களிடம் பேசக்கூடாது என அடித்துள்ளார். நியாயம் கேட்க நாங்கள் வந்தபோது, காவல் துறையை வைத்து மிரட்டுகிறார். இந்த பள்ளி யின் முதல்வர் மாணவர்களை அடிப்பதை யும், தலைமுடியை பிடித்து ஆட்டுவதையும் குழந்தைகள் அப்படியே அனைவர் முன்னி லையிலும் சொல்கிறார்கள். அந்த வீடியோ கூட எங்களிடம் உள்ளது. உடனடியாக இப் பள்ளியின் மீதும் சம்பந்தப்பட்ட முதல்வர், தாளாளர் மீது உரிய விசாரணை மேற் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், என் றனர். இந்நிலையில், சில பெற்றோர்கள் இந்த பள்ளியே எங்களுக்கு வேண்டாம் என்று, குழந்தைகளை அழைத்து சென்றனர். அரசுப்பள்ளி தலைமையாசிரியர் மீது புகார் இதேபோன்று, கோவை அருகே சின்னியம் பாளையத்தில் அரசு தொடக்கப்பள்ளியில், 5ஆம் வகுப்பு மாணவர்கள் அடித்து பிடித்து விளையாடி கொண்டுள்ளனர். இதனை பார்த்த தலைமையாசிரியர் எச்சரித்துள்ளார். ஆனால், அவர்கள் மீண்டும் மீண்டும் இத னையே செய்துள்ளனர். இதனால், கோபம டைந்தவர், அனைத்து மாணவர்களையும் தனது அறைக்கு அழைத்து, பிரம்பால் அடித் துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து மாண வர்கள் தங்கள் பெற்றோர்களிடம் முறையிட்ட னர். இதையடுத்து வெள்ளியன்று காலையில் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்ட னர். இதில், மாணவர்களை அடித்த தலைமை ஆசிரியை மீது உடனடியாக நடவடிக்கை எடுக் குமாறு தெரிவித்தனர். இதுகுறித்து அறிந்தது வட்டார கல்வி அலுவலர் தமிழ்செல்வி மற் றும் பள்ளி மேலாண்மை குழுவினர் பள்ளிக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினா். பின்னர் தான் மாணவர்கள் மீதும் தவறு இருப்பது பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் பெற்றோர் தரப்பில் தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கூறி னர். எனவே, தலைமை ஆசிரியையிடம் இனி வரும்காலங்களில் இதுபோன்று தவறு நடக்காது என்று கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர் எழுத்துப்பூர்வமாக கடிதம் பெற்றனர். இதை யடுத்து பெற்றோர் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.
சாலையை மீட்டுத்தர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
தருமபுரி, செப்.15- நல்லம்பள்ளி அருகே சாலையை மீட்டுத்தர வலியு றுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே கம்மம்பட்டி ஊராட்சிக்குட்பட்டது நார்காரன்கொட்டாய் கிராமம். இக்கிரா மத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 200க்கும் மேற்பட்டோர் வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதி மக் கள், அவர்களது முன்னோர் காலத்திலிருந்து பயன்படுத்தி வந்த மண் சாலையை, அதேபகுதியைச் சேர்ந்த 3 பேர் கொண்ட கும்பல், தங்களுக்கு சொந்தமான சாலை எனக்கூறி, ஜேசிபி இயந்திரம் மூலம் குழிதோண்டி உள்ளதாக கூறப்படு கிறது. இதனால் ஒரு வார காலமாக அப்பகுதி மக்கள் வீடு களை வீட்டு வெளியோர முடியாமலும், பள்ளி, கல்லூரிக்கு மாணவ, மாணவிகள் சென்று வரமுடியாத நிலை ஏற்பட்டுள் ளது. இதுகுறித்து பொதுமக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளி டம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், எந்தவித நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த பொது மக்கள் வியாழனன்று நார்காரன்கொட்டாய் கிராமத்தில், சாலையில் குழி தோண்டப்பட்ட இடத்தில் சாலையை மீட்டு தரக்கோரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இது குறித்து அரசு உரிய கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்கா விட்டால், கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை, ரேசன் அட்டைகளை தருமபுரி மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்து விட்டு, ஆட்சியர் அலுவ லகத்திலேயே குடியேறும் போராட்டம் நடத்தப்படும், என்ற னர்.