districts

img

அருவங்காடு தொழிற்சாலையில் தீ விபத்து - இருவர் காயம்

உதகை, நவ. 24- நீலகிரி மாவட்டத்தில் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் நடந்த  தீ விபத்தில் லேசான காயங் களுடன் இருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலையில், இந்திய ராணுவத்திற்கு தேவையான வெடி பொருட் கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த  தொழிற்சாலையில் ஆயிரத்துக்கும் மேற் பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வரு கின்றனர். இந்நிலையில், வியாழனன்று அதிகாலை  தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட் டுள்ளது. இதில் மனோஜ், இமான்ஷூ ஆகி யோர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். தீ விபத்து நிகழ்ந்த போது அபாய ஒளி  எழுப்பப்பட்டுள்ளது. இதனால் அங்கு பணி புரிந்த சக ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு  வந்து விபத்தில் காயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டனர். அவர்களை வெடி  மருந்து தொழிற்சாலை மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் கோவை மருந்துவமனைக்கு சிகிச் சைகாக அனுப்பி வைக்கப்பட்டனர்.  இந்த வெடி விபத்து அருவங்காடு பகுதி யில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்த   விபத்து தொடர்பாக அருவங்காடு போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.