districts

காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிடுக

கோவை, ஜூன் 27- மின்வாரியத்தில் உள்ள காலிப் பணிடங்களை உடனடியாக நிரப்ப வலி யுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய  அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மின்சார வாரியம் கேங்மேன்  பணியாளர்களை களப்பணியாளர் களாக அறிவிக்க வேண்டும். மின்வாரி யத்திலுள்ள 60 ஆயிரம் காலிப்பணி யிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் கோவை மின்வாரிய தலைமை  நிலையம் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அமைப் பின் மாநில இணைச்செயலாளர் டி. மணிகண்டன் தலைமை ஏற்றார். சங்கத் தின் தெற்கு வட்ட செயலாளர் காளி முத்து, வடக்கு வட்ட செயலாளர் மணி கண்டன், கோவை மண்டல பொரு ளாளர் சாதிக் பாட்ஷா, தெற்கு கிளைச்  செயலாளர் ரத்தினகுமார், மத்திய மண்டல அலுவலக செயலாளர் பழனிச்சாமி, கோவை மத்திய மண்டல செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினார். முடிவில், சீரநாயக்கன்பாளையம் கோட்ட கிளை தலைவர் சுரேஷ் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.