districts

img

பள்ளிவாசல் பிரச்சனையில் நீதிமன்றத்தில் முறையான ஆவணங்கள் தாக்கல் செய்யப்படும்: வக்பு வாரியத் தலைவர் பேட்டி

திருப்பூர், ஜூலை 1- திருப்பூர் 15 வேலம்பாளையம் அருகே  மகாலட்சுமி நகர் பள்ளி வாசல் பிரச்சனை யில் உரிய, முறையான ஆவணங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய் யப்படும் என்று தமிழ்நாடு வக்பு வாரிய தலை வர் அப்துல் ரகுமான் கூறினார். வியாழனன்று மகாலட்சுமி நகர் பள்ளிவா சலுக்கு மாநகராட்சி மற்றும் காவல்துறை அதி காரிகள் சீல் வைக்க வந்தனர். இதற்கு எதிர்ப்பு  தெரிவித்து இஸ்லாமியர்கள் திருப்பூரில் பல் வேறு பகுதிகளில் சாலை மறியல் போராட்டம்  நடத்தினர். இதனால் ஒரு பதட்டமான சூழ் நிலை உருவானது. சென்னை உயர்நீதிமன் றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டு  வியாழன் அன்று பிற்பகல் நீதிபதிகள் விசாரித் தனர். மகாலட்சுமி நகர் பள்ளி வாசலில் ஜூலை  நான்காம் தேதி வரை ஏற்கனவே இருக்கும் நிலை தொடர்வதற்கு உத்தரவிட்டனர். இதை யடுத்து, திருப்பூரில் பள்ளிவாசலுக்கு சீல்  வைக்க வந்த அதிகாரிகள் திரும்பிச் சென்ற னர்.  இஸ்லாமியர்கள் போராட்டம் முடித்துக்  கொள்ளப்பட்டது. இந்த சூழ்நிலையில், வெள்ளியன்று திருப்பூர் வருகை தந்து மகாலட்சுமி நகர்  பகுதியில் உள்ள பள்ளிவாசலில் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் அங் கிருந்த நிர்வாகிகளை சந்தித்தார். அவருடன் மே 17 இயக்க ஒருங்கிணைப் பாளர் திருமுருகன் காந்தி உள்பட இஸ்லா மிய அமைப்பு நிர்வாகிகள் சந்தித்து கலந்து ரையாடினர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகு மான், பதற்றமான சூழ்நிலையை தவிர்க்க இஸ்லாமிய அமைப்பு நிர்வாகிகளுடன் பேசி  இருப்பதாகவும், காவல்துறை மற்றும் அதிகா ரிகள் நேற்றைய தினம் மத வழிபாட்டு தளத் திற்கு தடை செய்ய வரும்போது ஏற்பட்ட எதிர்ப்பு அலையின் காரணமாக ஒரு பதட்டம்  உருவாகியதாகவும், இனிமேல் அதுபோல் உருவாகாத வகையில் நடவடிக்கை மேற் கொள்ள மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரி களை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.  மேலும் உயர்நீதிமன்றத்தில் வக்பு வாரியம்  சார்பாக முறையான ஆவணங்களை தாக்கல்  செய்ய இருப்பதாகவும், இதற்கு முன் தகவல் கள் சரிவர செல்லாததன் காரணமாகவே இது  போன்ற சூழல் ஏற்பட்டதாகவும் தெரிவித் தார். திருப்பூர் போன்ற அனைத்து மதத்தின ரும் ஒற்றுமையாக சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய நகரில் இதுபோன்ற பதற்ற மான சூழ்நிலை இனி நிகழாத வகையில் நடவ டிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரி வித்தார். செய்தியாளர்களிடம் பேசிய மே 17  இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்  காந்தி, இதுபோன்ற மத வழிபாட்டுத்த லங்கள் தொடர்பான பிரச்சனைகளில் காவல் துறை மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபர்களிடம் பேசி எந்தவித பாதிப்பும் இல் லாமல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் இதனை பயன்படுத்தி பாஜக போன்ற கட்சிகள் எந்தவித அசம்பா வித சம்பவங்களிலும் ஈடுபடாத வகையில் நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.