districts

சிற்றுந்துகளில் கட்டண கொள்ளை

ஈரோடு, ஜன. 17- ஈரோட்டில் இயங்கும் தனியார் சிற்றுந்தில் பொதுமக்களிடம் கட்டண  கொள்ளை நடப்பதாக புகார் எழுந்த  நிலையில், இதன் வீடியோ காட்சி கள் தற்போது சமூக வலைதளங்க ளில் வைரலாகி வருகிறது.  தமிழகத்தில் அரசு போக்கு வரத்து கழகங்கள் நகர்ப்புறம் மற் றும் புறநகர் பேருந்துகளை இயக்கி  வருவதைப் போல கிராமப் பகுதிக ளுக்கும், அரசு பேருந்துகள் செல் லாத நகரப்பகுதிகளுக்கு சிற்றுந்து கள் இயக்கப்படுகின்றன. தனியார்  மட்டுமே நடத்தும் இந்த சிற்றுந்து கள் குறைந்த தொலைவே இயக்கப் படுகின்றன. இதில் ஒன்று ஈரோடு மாந கரத்தில் இயக்கப்படும் பிகேஎன் என்ற சிற்றுந்து. ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையம் வழியாக வெண்டிபாளையம் வரை இப்பேருந்து இயக்கப்படுகிறது. இதில் கடந்த சில நாட்களாக பய ணிகளிடம் பெறப்படும் கட்டணத்திற்கு உரிய பயணச் சீட்டு வழங்கப்ப டுவதில்லை என்று பயணிகள் மத்தி யல் புகார் எழுந்தது. இந்நிலையில் பொங்கல் போன்ற  திருவிழா காலங்களில் தனியார் பேருந்துகள் குறிப்பாக ஆம்னி பேருந்துகள் கட்டண கொள்ளை அடிப்பதும், அவற்றைத் தடுப்ப தும் சாதாரண நிகழ்வாகி விட்டது.  அதுபோல பிகேஎன் சிற்றுந்தும் சொகுசுப் பேருந்து என்றும், ஈரோடு  30 சூப்பர் சர்வீஸ் என்றும் குறிப்பிட்டு இயக்கப்படுகிறது. இதில் வழங்கப் படும் பயணச் சீட்டில் ரூ.2 என குறிக் கப்பட்டிருக்கிறது. இது உயர்த்தப் பட்டு பல மாதங்கள் ஆகிறது.  ஆகவே அப்போது அச்சடிக்கப் பட்ட பயணச் சீட்டுகள் காலாவதி யாகிவிட்டன. அவற்றை பயன்ப டுத்த விரும்பும் நிர்வாகம் அதனைத்  திருத்தி, பெறும் கட்டணத்திற்கான எண்களை சீல் வைத்து விநியோ கித்து வந்தனர். ஆனால் அதிலிருந்து  மாறாத பிகேஎன் நிர்வாகம் ரூ.2 க் கான பயணச் சீட்டையே பயணிக ளுக்கு வழங்கி வருகிறது. புழக்கத் தில் இல்லாத கட்டணத்திற்கான பய ணச்சீட்டை அளிக்கும் நிர்வாகம், சம் பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு எவ்வாறு  உண்மையான கணக்கை கொடுக் கும். எப்படி சம்பந்தப்பட்ட அரசு நிர் வாகம் இதனை அனுமதிக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. மக்க ளையும், அரசையும் ஒரு சேர ஏமாற் றும் தனியார் சிற்றுந்து நிர்வா கத்தின் நடவடிக்கை குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.