districts

img

மக்கள் பணி செய்யும் ஊராட்சி தலைவர் மீது பொய் வழக்கா?

திருப்பூர், ஜூலை 18 - மக்கள் பணி செய்யும் ஊராட்சித் தலை வர்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்வதை  தள்ளுபடி செய்வதுடன், அவர்கள் தயக்க மின்றி  பணி செய்வதற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று திருப்பூர் ஒன்றிய  ஊராட்சிமன்றத் தலைவர்கள் கூட்டமைப்பு கோரியுள்ளது. திருப்பூர் ஒன்றிய ஊராட்சித் தலைவர்கள்  கூட்டமைப்புத் தலைவரும், இடுவாய் ஊராட் சிமன்றத் தலைவருமான க.கணேசன் மீது  பாஜகவை சேர்ந்த செல்வகுமார், சம்பத்கு மார், செகமலையப்பன் ஆகிய மூவரும், அதி முகவை சேர்ந்த சென்னியப்பன் என்பவரும்  அவதூறு பரப்பி, தாக்க முற்பட்டதுடன், அவர்  சாதியைச் சொல்லி திட்டித் தாக்கியதாக மங்க லம் காவல் நிலையத்தில் பொய் புகார் கொடுத்தனர். அந்த புகார் கொடுத்து ஏறத் தாழ ஒரு மாதம் கழித்து காவல் துறையினர் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட் டத்தில் ஊராட்சித் தலைவர் கணேசன் உள் ளிட்ட நால்வர் மீது வழக்குப் பதிவு செய்த னர்.

மக்கள் பணி செய்யும் தலைவர்கள் மீது  அபாண்டமான பழி சுமத்தி பொய் புகார் அளித் தால், அதை உரிய முறையில் விசாரிக்காமல்  இது போன்ற வழக்குப் பதிவு செய்வது கடும்  அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், திருப்பூர் ஒன்றிய ஊராட் சித் தலைவர்கள் கூட்டமைப்புத் தலைவர்  க.கணேசன், செயலாளர் ப.சண்முகசுந்த ரம், பொருளாளர் ஆ.சரவணன், மங்கலம்  ஊராட்சிமன்றத் தலைவர் எஸ்.எம்.பி. மூர்த்தி, வள்ளிபுரம் தலைவர் முருகேசன், மேற்குப்பதி ரெஜீஸ், பெருமாநல்லூர் சாந்தா மணி உள்ளிட்ட பெரும்பாலான ஊராட்சி மன்றத் தலைவர்கள் செவ்வாயன்று திருப்பூர்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வருகை  தந்து, மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜை  நேரில் சந்தித்து மனு அளித்தனர். இதில் கூறப்பட்டு இருப்பதாவது: திருப் பூர் ஒன்றியம் இடுவாய் ஊராட்சியில் உள்ள  பாரதிபுரம், வள்ளுவர் நகர் பகுதியில் மக்க ளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கும் பிரச் சனை பற்றிய விபரத்தை குறிப்பிட்டுள் ளனர். இந்நிலையில் கடந்த மே 4ஆம் தேதி  30 பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்பட் டுள்ளது. சில தினங்களில் வட்டாட்சியர் மூலம்  இடம் அடையாளம்  காண்பிக்கப்பட்டு, அங்கு  அவர்கள் வீடுகள் கட்டத் தொடங்கியுள்ளனர்.  பலர் வீடுகளைக் கட்டி குடியிருக்கவும் ஆரம் பித்தனர்.

இந்நிலையில் கடந்த ஜூன் 16 அன்று  முறைப்படி வீட்டுமனைப் பட்டா பெற்றவர்க ளிடம் பாஜகவை சேர்ந்த செல்வகுமார், சம்பத் குமார், செகமலையப்பன் ஆகியோர் தகராறு செய்து தாக்குதல் நடத்தியுள்ளனர். பட்டா பெற்றவர்களுக்கும், பட்டா பெற விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கும் இடையே பகைமையை உருவாக்கி இருத ரப்பினரையும் மோத விட்டு கலவர சூழலை  ஏற்படுத்த முயற்சித்தனர். சம்பவம் நடை பெற்றபோது அங்கு இல்லாத ஊராட்சி மன்றத் தலைவர் கணேசன், மாலை அங்கு சென்று பட்டா பெற்றவர்களிடம் நடந்த சம்ப வம் குறித்து கேட்டறிந்துள்ளார். அப்போது அங்கு வந்த மேற்படி பாஜகவை சேர்ந்த மூவ ரும், அதிமுக சென்னியப்பனும், ஊராட்சித் தலைவரை பார்த்து ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெற்றுக் கொண்டதாக அவதூறாகக் கூறி னர். வேண்டுமென்றே பொய்யான, அபாண்ட மான குற்றச்சாட்டுகளை எவ்வித ஆதாரமும் இல்லாமல் பழி சுமத்தியதுடன், அவரிடம் சண்டையிட்டு தாக்க முற்பட்டனர்.

இது குறித்து காவல் துறையிலும் புகார்  தெரிவிக்கப்பட்டது. ஆனால் பாஜகவை சேர்ந்தவர் என்ன சாதி என்றே ஊராட்சித்  தலைவர் கணேசனுக்குத் தெரியாதபோது, அவரை சாதியைச் சொல்லித் திட்டி அடித் ததாக பொய் புகார் கொடுத்திருக்கிறார். ஜூன்  16ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்தில்  ஜூலை 12ஆம் தேதி மங்கலம் காவல் நிலை யத்தார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.ஊராட்சி மன்றத் தலைவர் என்பவர் அரசு  அறிவிக்கக் கூடிய திட்டங்களை செயல்படுத் தும் ஓர் அரசு ஊழியர் ஆவார். அந்த வகையில்  இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவர் மக்கள்  பணி செய்வதைத் தடுத்து பொய் புகார் அளித் தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண் டும். அவர் மீதுள்ள பொய் வழக்கைத் தள்ளு படி செய்வதுடன், இது போன்ற பணி செய்யும்  ஊராட்சி மன்றத் தலைவர்கள் மீது பொய் புகார் தருகின்ற நிலையில், ஊராட்சி மன்றத்  தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க  வேண்டும் என்று திருப்பூர் ஒன்றிய ஊராட் சிமன்றத் தலைவர்கள் கூட்டமைப்பு வலியு றுத்தி உள்ளது. இத்துடன், திருப்பூர் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் சாமிநாதனிடமும் இப்பிரச் சனை தொடர்பாக ஊராட்சிமன்றத் தலைவர் கள் கூட்டமைப்பினர் மனு அளித்தனர். மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பா ளரும் இப்பிரச்சனையில் விசாரணை செய்து  உரிய தீர்வு காண்பதாக உறுதியளித்தனர் என்று ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப் பினர் தெரிவித்தனர்.