கொரோனா பரவல் காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகள் அமலான நிலையில், கோவையில் உள்ள கல்லூரிகளில் பயின்று வரும் பிற மாவட்ட மாணவர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இரவு நேரங்களில் ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும் உணவகங்கள், கேளிக்கை விடுதிகள், திரையரங்குகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு தளங்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக கோவையில் உள்ள பெரும்பாலான கல்லூரிகளுக்கு பொங்கல், தைப்பூசம் ஆகிய பண்டிகைகளையும் நெருங்கி வருகின்றன. இதனால் கோவையில் உள்ள கல்லூரி விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்கள் மற்றும் வெளியூர்வாசிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.
இதனால் காந்திபுரம், சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், உக்கடம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. அந்தந்த பேருந்து நிலையங்களில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள், மற்றும் போலீசார் கூட்டத்தை தவிர்க்குமாறு ஒலிபெருக்கி மூலமாக அறிவித்து வருகின்றனர்.