districts

img

கார்ப்ரேட்டுகளுக்கு சலுகை; உழைக்கும் மக்கள் காதில் பூ

கோவை, பிப்.27- மக்கள் விரோத ஒன்றிய பட் ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் திங்களன்று மாநி லம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. வேலைவாய்ப்புகளை உருவாக் கும் விதத்தில் பொது முதலீட்டுக்கான நிதியை அதிகரிக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதித்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்து, வேலை நாட் களையும், ஊதியத்தையும் உயர்த்தி  வழங்க வேண்டும். இந்தியாவின் செல்வ வளத்தை தின்று கொழுக்கும் கார்ப்ப ரேட் மற்றும் பெரு முதலாளிகளுக்கு வரி சலுகைகளை ரத்து செய்வதோடு, செல்வ வரி, வாரிசு வரி போன்றவற்றை போட வேண்டும். ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு பயனளிக்காத ஒன்றிய அர சின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் திங்க ளன்று நடைபெற்றது.

இதன்ஒருபகுதியாக கோவை ரங்கே கவுண்டர் வீதியில், சிபிஎம் மேற்கு நகர செயலாளர் பி.சி.முருகன் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க் சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் சிறப்பு ரையாற்றினார். இதில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, டாஸ்மாக் ஊழியர்கள் சங்க செயலாளர் ஜான் அந்தோனிராஜ் உட் பட பலர் கலந்து கொண்டனர். கோவை கிழக்கு நகரக்குழுவின் சார் பில், புலியகுளம் பெரியார் சிலை முன்பு நகரக்குழு உறுப்பினர் ச.நாகராஜ் தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. எஸ்.கனகராஜ், மாவட்டக்குழு உறுப்பி னர் ஜாகீர், நகர செயலாளர் என்.செல்வ ராஜ் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்ற னர். சிங்கை நகரத்திற்குட்பட்ட வரதராஜ புரம் தண்ணீர் தொட்டி முன்பாக நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சீனிவாசன் தலைமை ஏற்றார். இதில், சிபிஎம் மாவட் டக்குழு உறுப்பினர் தி.மணி உள்ளிட் டோர் உரையாற்றினர். இதில், திரளா னோர் பங்கேற்றனர். எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் ஆனந்த் குமார் மில் எதிரே நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சண் முகசுந்தரம் தலைமை ஏற்றார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் யு.கே. சிவஞானம், சிபிஎம் மாமன்ற உறுப்பி னர்கள் வி.ராமமூர்த்தி, சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர். 

தருமபுரி

இதேபோன்று தருமபுரி பிஎஸ் என்எல் அலுவலகம் முன்பு சிபிஎம் ஒன் றிய செயலாளர் என்.கந்தசாமி தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம்.மாரிமுத்து, மாவட்டக்குழு உறுப் பினர் டி.மாதையன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அரூரில் ஒன்றிய செயலா ளர் பி.குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் ஏ.குமார், செயற்குழு உறுப்பினர் சோ. அருச்சுணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பாலக்கோட்டில் ஒன்றிய செயலா ளர் டி.எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.நாகராசன் உட் பட பலர் கலந்து கொண்டனர்.

நீலகிரி

நீலகிரி மாவட்டம், மஞ்சூர் பகுதி யில் சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் அலியார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தாலுகா செயலா ளர் நவீன்சந்திரன், மாதர் சங்க செய லாளர் ஜெயந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், ருத்ரன் நன்றி கூறினார்.

சேலம்

இதேபோன்று சேலம் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு, ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து “காதில் பூ வைத்து” மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிபிஎம் மாநகர செயலாளர் என்.பிரவீன்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில், மாவட்ட செயலாளர் மேவை. சண்முகராஜா கண்டனவுரையாற்றி னார். இதில், மாவட்டக்குழு உறுப்பினர் கள் ஆர்.குழந்தைவேல், எம்.சேதுமாத வன், எஸ்.கவிதா உட்பட பலர் கலந்து கொண்டனர். 

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளை யம் ஆனங்கூர் பிரிவு சாலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் நகர செயலாளர் என்.சக்திவேல் தலைமை ஏற்றார். மூத்த தோழர் எஸ்.ஆறுமுகம், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ஆர்.முருகேசன் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.

ஆளுநருக்கு கண்டனம்

காரல் மார்க்ஸ் குறித்து உளறிய தமி ழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண் டித்து சிபிஎம் சார்பில் திருச்செங்கோட் டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.மனோகரன் தலைமை ஏற்றார். இதில், நகர செயலா ளர் ஐ.ராயப்பன், ஏ.ஆதிநாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.