districts

img

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம்

நாமக்கல், பிப்.10- திருச்செங்கோட்டில் குடியிருப்பு அருகே கழிவுநீர் சுத்தி கரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் ஞாயிறன்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட னர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, கூட்டப்பள்ளி காலனியில் 4500க்கும் மேற்பட்ட வீட்டுவசதி வாரிய குடி யிருப்புகள் உள்ளன. இதன் அருகே 33 ஏக்கர் பரப்பளவில் இருந்த கூட்டப்பள்ளி ஏரி, தற்போது சுருங்கி கழிவுநீர் ஓடையாக மாறிவிட்டது. இந்நிலையில், கூட்டப்பள்ளி காலனி குடியிருப்பின் அருகே ஏரிக்கரையில் கழிவுநீர் சுத்தி கரிப்பு நிலையம் அமைக்க உள்ளதாக, நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் ஆர்ப்பாட்டம், வீடுகளில் கருப்புக்கொடி கட்டுதல் போன்ற இயக்கங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனைத்தொ டர்ந்து, ஞாயிறன்று கூட்டப்பள்ளி பேருந்து நிறுத்தத்தின்  அருகே அய்யகவுண்டன்பாளையம், கூட்டப்பள்ளி குடித் தெரு, நாச்சிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தகிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டப்பள்ளி ஏரியை தூர்வாரி நீர் நிலையாக மாற்ற வேண்டும். இப்பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் முடிவை கைவிட்டு, ஊருக்கு ஒதுக்குப்புறத் தில் அமைக்க வேண்டும். உரிய தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டம் விரிவுப்படுத்தப்படும், என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.