திருப்பூர், டிச.16 - விவசாயிகளுக்கு எதிராக செயல்ப டும் ஒன்றிய மோடி அரசை கண்டித்து திருப்பூரில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களைத் தடுத்து காவல் துறையி னர் கைது செய்தனர். விளைப்பொருள்களுக்கு குறைந்த பட்ச ஆதாரவிலை நிர்ணயச் சட்டம் கொண்டு வர வேண்டும். வேளாண் மைக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மின்சார ஒழுங்குமுறை சட்டத் தை திரும்பப் பெற வேண்டும். விவசா யிகள் பெற்ற கடன் முழுவதையும் தள் ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங் கத்தினர் திங்களன்று ரயில் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்தி ருந்தனர். இதன்படி ரயில் நிலையம் நோக்கிச் சென்ற விவசாயிகளை காவ லர்கள் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்த போராட்டத்திற்கு, மாநிலத்த லைவர் சண்முகம் தலைமை வகித்தார். சுமார் நூறு பேர் வரை கலந்து கொண்ட னர்.