ஈரோடு, ஆக.18- அத்திக்கடவு – அவிநாசி திட்டத் திற்கு நிலம் வழங்கிய விவசாயிக ளுக்கு விரைவில் இழப்பீடு வழங் கப்படும் என அமைச்சர் முத்துச் சாமி தெரிவித்துள்ளார். ரூ.1916.41 கோடி மதிப்பீட்டில் வடிவமைக்கப்பட்ட அத்திக்கிடவு – அவிநாசி திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து சனியன்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். ஈரோடு மாவட்டம், பவானி காலிங்க ராயன் அணைக்கட்டு பகுதியில் நடைபெற்ற நிகழ்வில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகி யோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், அத்திக்கடவு - அவிநாசி திட்டம் பவானி ஆற்றில் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்புறத்தி லிருந்து, ஆண்டொன்றிக்கு 1.50 டி.எம்.சி உபரிநீரை விநாடிக்கு 250 கனஅடி வீதம் 70 நாட்களுக்கு நீரேற்று முறையில் நிலத்தடியில் குழாய் பதிப்பின் மூலம் கொண்டு வரப்படுகிறது. இது ஈரோடு, திருப் பூர் மற்றும் கோவை மாவட்டங்க ளில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் 24,468 ஏக்கர் நிலம் பயன்பெறும். இதில், 32 நீர்வளத் துறை ஏரிகள். 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் 971 குளம் குட்டை கள் என மொத்தம் 1045 குளம், குட்டைகள் நீர் நிரப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், விவசாய நிலங்களின் நிலத் தடி நீர் மட்டம் உயர்ந்து, வேளாண் நிலங்கள் பாசன வசதி பெறுவ தோடு. குடிநீர் தேவைகள் பூர்த்தி யாகும். இத்திட்டத்திற்காக நேரடியாக விவசாயிகளிடம் பேசி நிலம் கையகப்படுத்தப்பட்டது. விவசாயி கள் மிகுந்த அக்கறையோடும், பெருந்தன்மையோடும் நிலத் தினை வழங்கினர். நிலம் கையகப் படுத்துவதிலும் பீடர் லைனில் உள்ள பிரச்சனை சரிசெய்வதிலும் சில தாமதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பணிகள் உடனடியாக துவங்கப்பட்டது. பணிகள் துவங் கப்பட்ட 4 மாத காலத்தில் விடுபட்ட பணிகள்முழுமையாக நிறைவேற் றப்பட்டது. தொடர்ந்து உபரிநீர் கிடைத்தவுடன் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் 1045 குளங் களில் சில குளங்கள் தவிர அனைத்து குளங்களுக்கும் தண் ணீர் சென்றுள்ளது. துறை அலு வலர்களுடன் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு. அவர்களிடம் அறிக்கை பெற்ற பின்பு இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு உபரிநீர் மட்டுமல்லாது, எல்பிபி வாய்க்காலில் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரின் மூலம் கிடைக்கும் கசிவு நீர் இதற்கு பெரும் உதவியாக இருக் கும். தொடர்ந்து 70 நாட்களுக்கு ஒன்றரை டிஎம்சி தண்ணீர் வழங்க முடியும் என்ற நம்பிக்கை உள் ளது. இந்த திட்டத்திற்கு நிலம் வழங் கிய விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான பட்டியல் தயா ரித்து நிதி ஒதுக்கீட்டுடன் அர சாணை வெளியிடப்பட்டுள்ளது. சில தினங்களில் விவசாயிகளுக்கு பணம் வழங்கப்படும், என்றார். இந்நிகழ்வில், ஈரோடு நாடாளு மன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.ஜி.வெங்கடாசலம், ஈ.ஆர்.ஈஸ்வரன், சரஸ்வதி, ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம் மற்றும் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.