districts

img

சிப்காட்டுக்கு எதிர்ப்பு: போராடிய விவசாயிகள் கைது

நாமக்கல் ஜூன் 5- மோகனூர் சாலை, வளையபட்டியில் சிப்காட் அமைப்பதை கைவிட வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தி னர் கைது செய்யப்பட்டனர். நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டத் தில் லத்துவாடி, ஈச்சவாரி  துவங்கி, மேல் பரளி, கம்பத்தூர்பட்டி, மல்லுமாச்சம்பட்டி உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் உள்ளது. இங்கு 2500 ஏக்கர் விளைநிலங்கள், வீடுகள், கோழிப் பண்ணைகள் உள்ளது. இந்நிலை யில், தமிழ்நாடு அரசு சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க நிலம் கையகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. விவசாய நிலம் பாதிக்கப் படும், விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகும் என்கிற அச்சம் விவசாயிகள் மத்தி யில் எழுந்துள்ளது. இதனையடுத்து, சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதை கைவிட வேண் டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வளையபட்டி வருவாய் ஆய்வா ளர் அலுவலகம் முன்பு திங்களன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு விவசாயிகள்  சங்க மாவட்ட செயலாளர் பி.பெருமாள் தலைமை ஏற்றார். இதில், சிப்காட் எதிர்ப்புக்குழு ஒருங் கிணைப்பாளர் பாலசுப்பிரமணியம் மற்றும்  வி.கே.வீரமலை, கே.ராம்குமார், என்.சரவ ணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வி. நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தின் நோக்கங்களை விளக்கி சங் கத்தின் தலைவர் ஏ.ஆதிநாராயணன் உரை யாற்றினார். முன்னதாக, வருவாய் அலுவலர் அலுவலகத்தின் முன்பு சாலையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதைய டுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள்,  விவசாயிகள் சங்கத்தினரை மோகனூர் காவல் துறையினர் கைது செய்தனர்.