districts

தேவைக்கேற்ப உரம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

உதகை, ஜூலை 29- நீலகிரில் பெய்த மழைக்கு தேயிலை தோட்டங்களில் நல்ல ஈரப்பதம் ஏற்பட்டிருப்பதால் விவசா யிகள் உரமிட ஆயத்தமாகி வருவ தால் தேவைக்கேற்ப தட்டுப்பா டின்றி உரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். நீலகிரி மாவட்டத்தில், தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில், 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை, 100க்கு மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் செயல் படுகிறது. கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில், 30 ஆயிரம் பேர் அங்கத்தினர்களாக உள்ளனர். இவர்கள் தங்களது தோட்டத்தில் அறுவடை செய்யும் இலைகளை அந்தந்த தொழிற்சாலைகளுக்கு விநியோகித்து வருகின்றனர். தற்போது, தினசரி 15 ஆயிரம் கிலோ முதல், 20 ஆயிரம் கிலோ வரை கொள்முதல் செய்யப்படு கிறது. கூட்டுறவு தொழிற்சாலை களில் விற்பனையை கணக்கிட்டு விலை நிர்ணயிக்கப்படுகிறது. சராசரியாக கிலோவுக்கு, 15 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. மழைக்கு குறிப்பாக தேயிலை தோட்டங்களில் நல்ல ஈரப்பதம் ஏற்பட்டுள்ளது. பெரும்பா லான பகுதிகளில் உரமிட்டு தோட்டங் களை பராமரிக்கும் பணியில் விவசா யிகள் ஈடுபட்டு வருகின்றனர். சில பகு திகளில் உரமிட்டு தோட்டங்கள் பராம ரிக்கப்பட்டதால் தேயிலை செடிகள் துளிர் விட்டுள்ளது. இதனால், மழை பொழிவாக தேயிலை தோட்டங்களுக்கு நல்ல ஈரப்பதம் ஏற்பட்டிருப்பதால் விவசா யிகள் தேயிலை தோட்டங்களை உர மிட்டு பராமரிக்க ஆயத்தமாகி யுள்ளனர். இதற்காக, என்சிஎம்எஸ் நிறுவனம் மற்றும் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் உரத் திற்கு விண்ணப்பித்துள்ளனர். குறிப் பாக, யூரியா பேஸ், பொட்டாசியம் கலந்த உரத்தை அதிகளவில் பயன்ப டுத்துவதால் விவசாயிகளில் தேவை அறிந்து தேவைக்கேற்ப உரம் விநி யோகிக்க வேண்டும். என, விவசா யிகள் வலியுறுத்தியுள்ளனர்.