திருப்பூர், அக்.15- தியாகி பிர்சா முண்டா பிறந்தநாளை யொட்டி விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டு கொடி நாள் கடைபிடிப் பின் ஒருபகுதியாக திருப்பூரில் செங்கொடி யேற்றி பிரச்சாரம் துவங்கியது. அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 35 ஆவது அகில இந்திய மாநாடு டிசம்பர் 13 முதல் 16 ஆம் தேதி வரை கேரள மாநிலம், திருச்சூரில் நடைபெற உள்ளது. இம்மாநாட் டுக்கு முன்னதாக கொடிநாள் கடைப்பிடிக்க அகில இந்திய விவசாயிகள் சங்க தலைமை அறைகூவல் விடுத்துள்ளது. இதையடுத்து செவ்வாயன்று திருப்பூர் மாவட்டம், பல்ல டத்தில் உள்ள தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட குழு அலுவலகம் முன்பு செங்கொடி உயர்த்தி முழக்கமிட்டு பிரச்சாரம் துவக்கப் பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் எஸ்.ஆர். மதுசூதனன், செயலாளர் ஆர். குமார், பொருளாளர் அ. பாலதண்டபாணி, துணைத்தலைவர் எஸ்.பரமசிவம், துணைச் செயலாளர் எஸ். வெங்கடாசலம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல் உடுமலை ஒன்றியம் பெரிய வாளவாடி, சர்க்கார் புதூர் ஆகிய ஊர்களிலும் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம், சர்க்கார் புதூர் கிளையில் விவசாயிகள் சங் கக்கொடியை மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் ஏற்றி வைத்தார். எஸ்.கிருஷ் ணசாமி, எஸ்.பரமசிவம், பி.வீரன், நா.சதீஸ், வீ.கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோன்று திருப்பூர் மாவட்டம், உடு மலை ஒன்றியம், பெரியவாளவாடி கிளை யில் லோகநாதன் தலைமையில் மூத்த தலை வர் வி.டி.ரங்கநாதன் கொடியேற்றி வைத் தார். மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூத னன் உரையாற்றினார். முத்துசாமி, கமலக் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.