திருப்பூர், மார்ச் 18 - சின்ன வெங்காயத்திற்கு கிலோ ரூ.30, தக்காளி கிலோ ரூ.15 என ஒன் றிய அரசு விலை நிர்ணயம் செய்ய வலி யுறுத்தி விவசாயிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பாக தக்காளி, வெங்காயத்தை தரை யில் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். சின்ன வெங்காயம், தக்காளி விலையை ஒன்றிய அரசு நிர்ணயிக்க கோரியும், தக்காளி மற்றும் வெங்கா யத்தை விவசாயிகளிடமிருந்து நேரடி யாக கொள்முதல் செய்து சமுதாய நலக்கூடம் மூலமாக விற்பனை செய்ய தமிழக அரசை வலியுறுத்தியும் தமி ழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தி னர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். நாடு முழுவதும் விவசாயிகள் வாழ்வாதாரம் கீழே சென்று கொண்டு இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் விவசாயிகளின் உற்பத்தி பொருட்க ளுக்கு உரிய விலை கிடைக்காததேயா கும். இந்த நிலையில் தற்போது தமிழ கத்தில் சின்ன வெங்காயம் குறைந்த பட்சம் கிலோவுக்கு 30 ரூபாய் இருந் தால் மட்டுமே விவசாயிகளுக்கு கட்டுப் படியான விலை கிடைக்கும். அதே போன்ற தக்காளி கிலோ 5 ரூபாய்க்கு விற்பனையாகி கொண்டிருக்கிறது, குறைந்த பட்சம் கிலோ 15 ரூபாய் இருந் தால் மட்டுமே கட்டுப்படியான விலை கிடைக்கும். இந்த விலை வீழ்ச்சியால் கடன் வாங்கிய விவசாயிகள் மிகக் கடு மையான நஷ்டத்திற்கு ஆளாகி உள்ள னர். ஒன்றிய பிரதமர் அனைத்து உற் பத்திப் பொருட்களுக்கும் உற்பத்தி செலவுடன் 50 சதவிகிதம் கூடுதலாக சேர்த்து குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்படும் என தேர்தல் அறிக்கையிலும், பிரச்சாரத்திலும் கூறியிருந்தார். ஆனால் அவருடைய ஆட்சிக் காலத்தில் இதுவரை அவ் வாறு நடக்கவில்லை. எனவே விளை பொருட்களுக்கு உற்பத்தி செலவுடன் 50 சதவிகிதம் கூடுதலாக குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும், தமிழக அரசும் உடனடியாக சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியை கூட் டுறவு சங்கங்கள் மூலமாக குறைந்த பட்ச ஆதார விலை கொடுத்து கொள்முதல் செய்ய வேண்டும் என்று இப்போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் வலியுறுத்தினர்.