நாமக்கல், அக்.2- மோகனூர் அருகே சிப்காட் தொழிற் பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி விவசாயிகள் காவடி எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வளை யப்பட்டி, அரூர், புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளையொட்டி சிப்காட் தொழிற் பேட்டை அமைக்கப்படும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவித்தது. ஆனால், தொழிற்பட்டை அமைக்கப்பட்டால், விவசாயம் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு, பொது மக்களும் பாதிக்கப்படும் சூழல் உள் ளது. இதனால் சிப்காட் அமைப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து அப்பகுதியில் உள்ள அரசியல் கட்சியினரும், விவ சாயிகளும் போராட்டங்களை மேற் கொண்டு வருகின்றனர். ஆனால், இது குறித்து தமிழக அரசிடம் இருந்து முறை யான பதில் ஏதும் வராததால், ஞாயி றன்று மோகனூர் காவிரி ஆற்று பகுதி யிலிருந்து மூன்று கிலோமீட்டர் நடை பயணமாக காவடிகளை சுமந்து கொண்டு மோகனூர் காந்தமலை ஸ்ரீபாலு தண் டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு ஊர் வலமாக வந்தனர். இதன்பின் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கக்கூடாது என வலியுறுத்தி முழக்கங்களை எழுப் பினர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.