சேலம், பிப்.11- அரசிராமணி பேரூராட்சி குப்பைக் கழிவுகளை குறுக் குப்பாறையூரில் கொட்டு வதற்கு எதிர்ப்புத்தெரிவித்து விவசாயிகள் 7 ஆவது நாளாக செவ்வாயன்றும், போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர். சேலம் மாவட்டம், சங்க கிரி வட்டம், அரசிராமணி பேரூராட்சியின் மொத்தக் குப்பைகளையும் குறுக்குப் பாறையூரில் கொண்டு வந்து கொட்டுகின்றனர். ஏற்கனவே கொட்டி வந்த இடத்தை விட்டுவிட்டு குறுக்குப்பாறை யூரில் கொட்டுவதற்கு விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற னர். மேலும், குப்பைகளை கொண்டு வரும் வாகனங்களை சிறைபிடித்தும், ஈஓ மற்றும் ஆர்டீஓ அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம், முற் றுகை போன்ற பல்வேறு போராட்டங்களை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நடத்தி வருகின்றனர். இதன்தொடர்ச்சியாக கடந்த 7 நாட்களாக விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. செவ் வாயன்று, 7 ஆவது நாளாக குப்பைக் கொட்டு வதற்கு ஏற்ற வகையில் பாறைகளை உடைப் பது, சுற்றுசுவர் எழுப்புவது போன்ற பணி கள் நடைபெறுவதையும், குப்பை வாகனங் களையும் தடுத்து மறியல் செய்யப்பட்டது. இதனையடுத்து, போராட்டத்தில் ஈடு பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளர் பி.பெருமாள், சேலம் மாவட்டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் பி.தங்கவேலு, சத்யராஜ், கிளை நிர்வாகிகள் பிஏ.சுப்ர மணி, நவநீத கண்ணன், ஆர்.வெங்கடாஜ லம், வளர்மதி, ஜெயந்தி, அம்சவள்ளி மற்றும் பாதிக்கப்படும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்டு 50க்கும் மேற்பட் டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதா கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பை ஏற் படுத்தியது.