districts

img

விளைநிலத்தைப் பாழ்படுத்திய தென்னை நார் தொழிற்சாலை கொந்தளித்த விவசாயிகள்; ஆலை இயக்கம் நிறுத்தம்!

உடுமலை மார்ச் 9- மடத்துக்குளம் தாலுகாவில் தென்னை நார் தொழிற்சாலை வெளியேற்றும் கழிவுக ளால் விவசாய விளைநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கொந்த ளித்த விவசாயிகள், அந்த ஆலைக்குத் தடை விதிக்க, உடுமலை கோட்டாட்சியரிடம் நேரில் வற்புறுத்தினர். இதையடுத்து அந்த ஆலையைப் பார்வையிட்ட கோட்டாட் சியர், எந்த விதிமுறையையும் பின்பற்றாத தென்னை நார் ஆலையை இயக்க கூடாது  என்று தடை விதித்தார்.

விவசாயிகள் முறையீடு

தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மடத்துக் குளம் தாலுகா துணைத்தலைவர் எம்.எம். வீரப்பன் தலைமையில் உடுமலை  கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணனிடம்  வியாழயன்று மனு அளிக்கப்பட்டது. விவசா யிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஆர். மதுசூதனன், உடுமலை தாலுகா செயலா ளர் பாலதண்டபாணி, மார்க்சிஸ்ட் கட்சியின் மடத்துக்குளம் தாலுக்கா செயலாளர் ஆர்.வி. வடிவேல், கமிட்டி உறுப்பினர்கள் ராஜரத் தினம், பன்னீர்செல்வம் ஆறுமுகம் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.  அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப் பதாவது: மடத்துக்குளம் தாலுகா, ஜோத்தம் பட்டி கிராமத்தில், சுமார் 15 ஏக்கர் நிலப்பரப் பில் மிகப்பெரிய அளவில் தென்னை மட்டை களை பயன்படுத்தி தென்னை நார் தயாரிக் கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகி றது. இங்கு தென்னை நார் கழிவுகளை மிகப் பெரிய அளவில் குவித்து வைத்துள்ளனர். அரசு வழங்கும் இலவச மின்சாரத்தை பயன்ப டுத்தி மூன்று கிணறுகளில் இருந்து லட்சக்க ணக்கான லிட்டர் தண்ணீரை உறிஞ்சி விளை நிலத்தில் கொட்டி வைத்துள்ள நார்கழிவுகள் மீது ஊற்றி சுத்தம் செய்கின்றனர். இதில் கழி வுநீர் தார் போன்று கருப்பு நிறமாக மாறி அரு கில் உள்ள ஓடை பள்ளத்தில் சென்று, விவசா யிகள் பயன்படுத்தும் குட்டை, பிரதான வாய்க்கால்களில் கலக்கிறது. இந்த இடம் அமராவதி பிரதான பாசனக் கால்வாய் அரு கில் இருக்கும் நிலையில் இது ஏராளமான விவசாயிகளுக்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற் படுத்தி வருகிறது. எனவே இந்த தென்னை  நார் தொழிற்சாலை மீது கடும் நடவடிக்கை எடுத்து, விவசாய விளைநிலங்களையும், சுற் றுச்சூழலையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியு றுத்தினர். 

நேரில் பார்வையிட்ட ஆர்டிஓ

இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆலை செயல்படும் இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதாக கோட்டாட்சியர் ஜஸ் வந்த் கண்ணன் விவசாயிகளிடம் உறுதி யளித்தார். அதன்படி வியாழனன்று பிற்பகல்  கோட்டாட்சியர் தலைமையில், வருவாய்,  மாசு கட்டுப்பாட்டு வாரியம், வேளாண்மை,  மின்சாரம் மற்றும் காவல் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் ஜோத்தம்பட்டிக்குச் சென்று அந்த ஆலையைப் பார்வையிட் டனர். இதில் எவ்வித விதிமுறைகளையும் பின் பற்றாமல்  தென்னை நார் தொழிற்சாலை செயல்படுவதையும், கழிவுநீரை வெளி யேற்றி விவசாய விளைநிலங்களுக்கு கடும்  பாதிப்பு ஏற்படுத்துவதையும் அதிகாரிகள் பார்வையிட்டனர். 

ஆலை இயக்கம் நிறுத்தம்

அந்த தனியார் ஆலை உரிமையாளரை அழைத்து கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண் ணன் கடுமையாக எச்சரிக்கை விடுத்தார். தென்னை நார் தொழிற்சாலையில் காங்கிரீட்  தளம் அமைத்து அதில் தென்னை நார்களை  சுத்தம் செய்ய வேண்டும். அந்த நீரை, ஒரு  தொட்டியில் சேகரித்து மறுசுழற்சி மூலம் சுத்தி கரித்து மீண்டும் பயன்படுத்த வேண்டும். இதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்து கொண்டு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் உரிய அனுமதி பெற்று அதன் பிறகே ஆலையை இயக்க வேண்டும். அதுவரை இந்த ஆலையை இயக்கக் கூடாது என்று தடை விதித்தார். மீறி ஆலையை இயக்கி னால் மூடி சீல் வைப்பதுடன், அங்கு வேலை  செய்வோரை கைது செய்வது உள்ளிட்ட சட்ட  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என் றும் அவர் கடும் எச்சரிக்கை விடுத்தார். இதை யடுத்து அந்த தென்னை நார்த் தொழிற் சாலை இயக்கம் நிறுத்தப்பட்டது. கோட்டாட்சியரின் நடவடிக்கைக்கு வர வேற்புத் தெரிவித்த விவசாயிகள், அவரது  உத்தரவுப்படி தனியார்ஆலை உரிமையா ளர், விவசாய விளைநிலங்களுக்கு பாதிப்பு  ஏற்படுத்தாமல் நிறுத்த வேண்டும். மீறி  செயல்பட்டால், அடுத்தக் கட்டப் போராட்டத் துக்கும் விவசாயிகள் தயாராக இருக்கின்ற னர் என்று எம்.எம்.வீரப்பன் தெரிவித்தார்.