districts

img

சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, அக்.9- சாம்சங் இந்தியா நிறுவனத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தி னர், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தொழிற்சங்க உரிமைகளுக் காக கடந்த ஒரு மாதமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் இந்தியா நிறுவனத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்பினர் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்ஒருபகுதியாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கத்தினர் புதனன்று மாநிலத்தில் பல்வேறு பகுதிக ளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.  ஈரோடு மூலப்பாளையம் பெட் ரோல் பங்க் அருகே விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கே.ஆர்.விஜயராக வன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மாரியப்பன், மாவட்டச் செயலாளர் சண்முக வள்ளி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.வி.மாரிமுத்து, பொருளாளர் கே.ரத்தினம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூர்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, விவசாயி கள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் தலைமை ஏற்றார். விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.சண் முகம் முன்னிலை வகித்தார். இதில் சிஐடியு மாநிலக்குழு உறுப் பினர் ஜி.சம்பத், இந்திய ஜனநா யக வாலிபர் சங்க மாவட்டச் செய லாளர் செ.மணிகண்டன், இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலை வர் ஜி.எஸ்.கல்கிராஜ், அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட துணைத்தலைவர் பா. லட்சுமி, தமிழ்நாடு கரும்பு விவசா யிகள் சங்கத் தலைவர் அ.பால தண்டபாணி, விவசாயத் தொழி லாளர் சங்க மாவட்டச் செயலாளர் அ.பஞ்சலிங்கம், விவசாயிகள் சங்கமாவட்டச் செயலாளர் ஆர். குமார் உட்பட பலர் கலந்து  கொண்டனர்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு அண்ணா சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ஆதிநாரா யணன் தலைமை வகித்தார். இதில் விவசாயிகள் சங்க மாவட் டச் செயலாளர் பி.பெருமாள், மாவட்ட துணைத்தலைவர்கள் கே.பூபதி, ஆர்.வேலாயுதம், துணைச்செயலாளர் ஜோதி, ஒன்றியத் தலைவர் ஏ.ஆர்.முத்து சாமி, சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் ராயப்பன், நகரச் செய லாளர் எஸ்.சீனிவாசன், ஒன்றியச் செயலாளர் ஆர்.மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று குமாரபாளையம் வட்டம் பல்லக்காபாளையம் அஞ் சலகம் முன்பு விவசாயத் தொழி லாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இதில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சி.துரை சாமி, மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.கோவிந்தசாமி, மாவட்ட நிர் வாகிகள் சித்ரா, லட்சுமி, சின்னத் தாயி உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

தருமபுரி

தருமபுரி பிஎஸ்என்எல் அலு வலகம் முன்பு, விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலை வர் கே.என்.மல்லையன் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. மாநிலப் பொருளாளர் கே.பி. பெருமாள், மாவட்டச் செயலாளர் சோ.அருச்சுணன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.முத்து, மாவட்டத் தலைவர் கே.கோவிந்தசாமி, சிஐடியு மாநிலச் செயலாளர் சி.நாகராசன், மாவட்டச் செயலா ளர் பி.ஜீவா உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

கோவை

கோவை தெற்கு வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, விவ சாயிகள் சங்க மாவட்டத் தலைவர் வி.பி.இளங்கோவன் தலைமை வகித்தார். இதில் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி. ஆர்.பழனிசாமி, விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.துரைசாமி, மாவட்ட நிர்வாகிகள் கே.மகா லிங்கம், பட்டீஸ்வரம், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.மனோக ரன், செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, பொருளாளர் வேலுசாமி, மாவட்ட நிர்வாகி ஆனந்தன் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.