உதகை, ஜூன் 12- கூடலூர் பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் அதிக ரிப்பால் மேரக்காய் விளைச்சல் பாதித்து உள்ளதாக விவசாயி கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. அதேசமயம் உதகை, குன்னூர் சுற்றுவட்டார பகுதி களில் கேரட், பீட்ரூட், காலிபிளவர், முட்டைகோஸ், மேரக் காய் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் விளைவிக்கப்படுகிறது. கூடலூர் பகுதியில் இஞ்சி, குறுமிளகு, காபி, ஏலக்காய், கிராம்பு உள்ளிட்ட பணப்பயிர்களும் பயிரிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் கூடலூர் பகுதியில் ஜூன் மாதம் தொடங்கி நவம்பர் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதை கருத் தில் கொண்டு நெல், நேந்திரன் வாழை, இஞ்சி உள்ளிட்ட பயிர்கள் மழைக்காலத்தில் பயிரிடப்படுகிறது. தொடர்ந்து கோடை காலத்தில் பாகற்காய், புடலங்காய், அவரைக்காய் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் முதல் பாகற் காய், மேரக்காய் பயிர்களை நடவு செய்து விவசாயிகள் கவ னித்து வந்தனர். மார்ச் மாதம் பரவலாக மழை பெய்தது. இத னால் பாகற்காய் கொடிகளை நோய் தாக்கியது. தொடர்ந்து விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் நட் டத்திற்கு ஆளாகினர். இதேபோல் மேரக்காய் பயிரிட்ட விவ சாயிகள் தொடக்க காலத்தில் விளைச்சலுக்கு ஏற்ப வரு வாய் ஈட்டி வந்தனர். தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் மேரக்காய் பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. பருவநிலை மாற்றம் மற்றும் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் நோய் பரவி மேரக்காய் விளைச் சல் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக தொடர் நட்டத்தை சந்தித்து வருவதாக விவசாயிகள் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மேரக்காய் செடிகளை நோய் தாக்கியுள்ளது. இதனால் பாகற் காயை தொடர்ந்து, தற்போது மேரக்காய் விவசாயமும் நட் டத்தை ஏற்படுத்தியுள்ளது, என்றனர்.