districts

img

விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் ஏலம் விடும் நடவடிக்கை ஒத்திவைப்பு

கோவை, ஏப்.27- கோவில் நிலத்தை பொது ஏலம் அறிவித்த  நிலையில், விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தையடுத்து, அறநிலைத்துறை ஏலம் விடும் நடவடிக்கையை ஒத்திவைக் கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி தாலுகாவிற்குட்பட்ட கூள நாயக்கன்பட்டி கிராமத்தில், கோவிலுக்கு சொந்தமான 60 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த  நிலத்தை 200 ஆண்டுகளாக 29 குடும்பங் களை சேர்ந்த விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், இந்து அறநிலைத்  துறை, இந்த நிலத்தை பொது ஏலத்திற்கு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த விவசாயிகள், தமிழ்நாடு  அனைத்து சமய நிலங்கள் பயன்படுத்து வோர் பாதுகாப்பு சங்கத்தினர், வட்டாட்சிய ரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தீர்வு காணப்படவில்லை.  இதனையடுத்து, கூளநாயக்கன்பட்டி கிராமத்தில் ஐயப்பன் கோவில் முன்பு  காத் திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை யடுத்து, மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி, ஏலம் விடும் நடவடிக்கையை நிறுத்தி வைப்ப தாக அறிவித்தனர்.  முன்னதாக, இந்த போராட்டத்தில், தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணை  தலைவர் எஸ்.ஆர்.மதுசூதன்ன், மாவட்ட செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி, விதொச செயலாளர் கே.ஏ.பட்டீஸ்வரன் மற்றும் சங்க  நிர்வாகிகள் ஸ்டாலின் உள்ளிட்ட திராள னோர் பங்கேற்றனர்.