திருப்பூர், செப். 26 - காங்கேயம் வீரணம்பாளையத்தில் வியாழனன்று தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் 7 ஆடுகள் உயிரிழந்தன. கடந்த சில நாட்களில் மட்டும் மூன்றா வது சம்பவமாக காங்கேயம் வட்டா ரத்தில் ஆடுகள் தெரு நாய்களால் கொல்லப்படுவது நடந்துள்ளது. இத னால் ஆத்திரமடைந்த விவசாயிகள் செத்த ஆடுகளை கொண்டு வந்து, காங் கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக போட்டு, தொடர் போராட்டத் தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் காவல்துறை வழக்கு பதிவு செய்து தர வேண்டும், ஆடுகள் பலியானதால் விவசாயிக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்புக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வியாழக்கிழமை மாலை தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வெள்ளியன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட் டம் நடக்கவுள்ள நிலையில், அந்த கூட் டத்தில் தெரு நாய்களால் ஆடுகள் பலி யாகும் பிரச்சனையை எழுப்பவும் விவ சாயிகள் தயாராகி உள்ளனர். கண்துடைப்பு நடவடிக்கை குறிப்பாக, கடந்த 30 நாட்களில் திருப்பூர் மாவட்டத்தில் நடந்த மிகப்பெ ரிய விவசாயிகள் வாழ்வாதார சோக சம் பவங்களை தொடர்ந்து பல கட்ட போராட்டங்களையும் விவசாயிகள் முன்னெடுத்துள்ளனர். மாவட்ட நிர்வா கம் ஏபிசி என்ற கருத்தடை மூலம் தெரு நாய்களை கட்டுப்படுத்த சில முயற்சி கள் எடுத்து வருகிறது. ஆனால் இன் றைய சூழ்நிலையில் இது தீர்வல்ல. இது ஒரு கண்துடைப்பே, என்று விவசாயி கள் கூறியுள்ளனர். தெரு நாய்களையும், வெறி நாய்க ளையும் தொல்லை தரும் விலங்கு என்ற பட்டியலுக்கு மாற்றி, அகற்றுவதற்கு உடனடியாக தமிழக அரசுக்கு மாவட்ட ஆட்சியர் கடிதம் எழுத வேண்டும். கேரளா காட்டுப்பன்றிகளை தொல்லை தரும் விலங்காக அறிவித்தது போல் இங்கு ஒரு முடிவு எட்டப்பட வேண் டும். அதாவது தெரு நாய்களால் மனித- விலங்கு மோதல்,மற்றும் மனிதர்க ளையும் கால்நடைகளையும் தாக்குதல் போன்ற காலத்தில் தவிர்க்கப்பட வேண்டியதை கருத்தில் கொண்டு திருப் பூர் மாவட்ட ஆட்சியர் உடனடியாக முடிவு எடுக்க வேண்டும். இது போன்ற தொடர்ந்து துயரச் சம்பவங்கள் ஆங் காங்கே நடந்து வருவதால் விவசாயி கள் வாழ்வாதாரத்தை இழந்து நிர்க தியில் நிற்கிறார்கள். கால்நடைத்துறை அதிகாரிகளும், கிராம ஊராட்சி நிர்வாக அலுவலர்களும் கடிபட்ட ஆடுகளுக்கு உண்டான சான்றிதழையும், ஆடுகளின் பிரேத பரிசோதனை சான்றிதழ்களை யும் உரிய காலத்தில் விவசாயிக ளுக்கு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கபூர்வமான முடிவை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள் ளனர்.