districts

img

வனத்துறையை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்

சேலம், செப்.25- கால்நடைகளை வேட்டையாடும்  சிறுத்தையை பிடிப்பதில் சுணக்கம் காட்டும்  வனத்துறையை கண்டித்து, மேட்டூரில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்ட னர். சேலம் மாவட்டம், மேட்டூரில், கொளத் தூர் அருகே உள்ள புதுவேலமங்கலம்,  வெள்ள கரட்டூர் கிராமங்களில் கடந்த 16 நாட்களாக சிறுத்தை ஒன்று உலா வரு கிறது. அந்தச் சிறுத்தை அங்குள்ள கோழிகளையும், ஆடுகளையும் பகலி லேயே வேட்டையாடி வருகிறது. மேட் டூர் வனச்சரகர் சிவானந்தம் தலைமை யிலான வனத்துறையினர் கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்க முயற்சித்து வரு கின்றனர். ஆனால், வனத்துறையினரின் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. இந்நிலையில், செவ்வா யன்று இரவு கணேசன் என்பவருக்கு சொந்தமான ஆட்டுப்பட்டியில் புகுந்த சிறுத்தை இரண்டு ஆடுகளை அடித்து கொன்றது. இதனால், ஆவேசமடைந்த விவசாயிகள் வனத்துறையினரை கண் டித்து புதனன்று கொளத்தூரில் உள்ள வனத்துறை சோதனைச்சாவடி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சோதனைச்சாவடி அருகே ஏராளமான  காவல் துறையினரும், வனத்துறையின ரும் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.