கோவை, டிச.30- நாற்று நடும் இக்காலத்தில் உரத் தின் தேவை அதிகமாக இருக்கிறது. ஆனால், இங்கு கடுமையான உரத் தட்டுப்பாடு உள்ளதால் கேரளாவில் இருந்து உரத்தை கடத்தி வருகிற நிலைக்கு ஆளாகியுள்ளோம் என குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் வேத னையை வெளிப்படுத்தினர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவ லக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. இதில், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். குறிப் பாக மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டிய பகுதிகளில், விவசாய நிலங் களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றி, யானை உள்ளிட்ட வன விலங்குகள் பிரச் சனை பூதகரமாக இருக்கும் நிலையில் வனத்துறையின் முக்கிய அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்காதது விவ சாயிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யது. முன்னதாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற விவசாய சங் கங்கள் மற்றும் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை எழுப்பினர். இதனை மனுவாகவும் அளித்தனர். இதில், குறிப் பாக விவசாய பொறியியல் துறை செயல் பாட்டில் விவசாயிகள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இத்துறையில் இருந்து டிராக்டர் மட்டுமே வாட கைக்கு கொடுக்கிறார்கள். இதனை இயக்க ஆட்கள் இல்லை என்கின்றனர். பொள்ளாச்சி வட்டத்தில் நான்கு டிராக்டர் கள் இருக்கிறது ஆனால், ஒரே ஒரு ஓட்டு நர்தான் இருக்கிறார். இதனால், மற்ற மூன்று டிராக்டர்கள் பயன்படுத்த முடி யாத நிலை உள்ளது. மேலும், டிராக்டர் வாடகை ஒரு நாளைக்கு ரூ. 400லிருந்து ரூ.1000 மாக உயர்த்தியுள்ளனர் என விவசாயிகள் குற்றஞ்சாட்டினர். இதற்கு பதிலளித்த செயற்பொறியாளர் “நிரந் தரமாக ஓட்டுநரை நியமிக்க ஆள் இல்லை. ஆகவே அவுட்சோர்ஸ் செய்ய முடிவெடுத்துள்ளோம், என்றார்.
மாவட்டத்தில் கடுமையான உரத் தட்டுப்பாடு நிலவுகிறது. நடவு நடும் இந்த நேரத்தில் டிஏபி-யும் இல்லை, யூரி யாவும் இல்லை. வெளி மார்க்கெட்டில் விற்கப்படும் உரங்கள் அதிகமான விலை வைத்து விற்கப்படுகிறது. இத னால், கேரளா சென்று கள்ளத்தனமாக உரம் கடத்தி வரும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். வேளாண் இயக் குநர் அலுவலகம் திடீரென முன்னறி விப்பு ஏதும் இல்லாமல் போடும் உத்தர வுகளால் விவசாயிகள் தவித்து வருகி றோம். மாற்று ஏற்பாடு ஏதும் இல்லாமல் பூச்சி கொல்லி மருந்துக்கு ஆறு மாதம் போடப்பட்ட தடையால் விவசாயிகள் என்ன செய்வது என்றே தெரியாமல் தவித்து வருகிறோம். மேலும், இதே போன்று காட்டுப்பன்றிகளின் எண் ணிக்கை அதிகரித்துள்ளது. இது, விவ சாய நிலங்களுக்குள் புகுந்து பயிர் களை கடுமையாக சேதப்படுத்துகிறது. கேரள அரசு அந்த மாநிலத்தில் காட்டுப் பன்றிகளை சுட்டுக்கொல்ல அனும தியை அளித்துள்ளதால், இப்பிரச்சனை வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இங்கும், விளைநிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தும் காட்டுபன்றி களை சுட்டுக்கொல்ல அனுமதிக்க வேண் டும். இக்கூட்டத்தில் வனத்துறை அதி காரிகள் பங்கேற்காதது குறித்து அதி ருப்தியை வெளிப்படுத்தினர்.
மேலும், தடாகம் பகுதியில் விவ சாய நிலங்களில் மோட்டர்களிலிருந்து காப்பர் வயர் திருட்டு கடந்த 11 மாதங் களாக 4 ஆண்டாக நடைபெற்ற எண் ணிக்கை அளவுக்கு அதிகரிப்பு. மாவட்ட காவல்துறையிடம் தொடர்ச்சியாக புகார் அளித்தும் இதுவரை வழக்குகூட பதிவிடுவது இல்லை. திருட்டின் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க தவ றும் போது எங்களால் வேறு ஏதும் செய்ய வழியில்லை. காவல்துறை யினரின் அலட்சியத்தால், காப்பர் ஒயர் திருட்டு 400 சதவிகிதம் அதிகரித்துள் ளது. விவசாய காப்பர் வயர் திருட்டு நிகழ்வுகளை தேசிய பேரிடராக அறி விக்க வேண்டும்.
கோவை மாவட்டத்தில் பொள் ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை, சூலூர், மேட்டுப்பாளையம், அன்னூர், காரமடை, தொண்டாமுத்தூர் உள் ளிட்ட பல்வேறு இடங்களில் கல்குவாரி கள் மூலம் கேரளாவிற்கு ஜல்லி போஸ் டர், கற்கள், எம்.சாண்ட், பி.சாண்ட் போன் றவைகள் கொண்டு செல்லப்படுகின் றன. அரசு அனுமதி வழங்கிய 2 யூனிட் டிற்கு பதிலாக 12 யூனிட் கொண்டு செல் லப்படுகிறது. இந்த பொருட்கள் கடத்தி கொண்டு செல்லப்படுகிறது. இதனால் அரசுக்கு மாதம் பல கோடி ரூபாய் வரு வாய் இழப்பு ஏற்படுகிறது. கனிமவளத் துறை கவனிக்காமல் உள்ளதால் இந்த தவறு நடக்கிறது. வருவாய்த்துறை, காவல் துறை அதிகாரிகள் இது குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண் டும். கோவை மாவட்டத்தில் கனிமவளத் துறை அனுமதி சீட்டு இல்லாமல் அன் னூர், மேட்டுப்பாளையம், சூலூர், பொள் ளாச்சி, தொண்டாமுத்தூர், காரமடை மேற்கு பகுதிகள் உள்பட பல இடங் களில் கிராவல் மண் இரவு நேரங்களில் கடத்தப்படுகிறது. இதனை உடனடி யாக ஆட்சியர் தலையிட்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கல் குவாரிகளுக்காக கனரக வாகனங்கள் கிராமப்புற சாலைகளை பயன்படுத்து வதால் அந்த சாலைகள் முற்றிலும் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் கிராம விவசாயிகள், வாகனங்களில் சென்றுவர முடிய வில்லை, என்றனர். முன்னதாக காட்டுப்பன்றிகளை சுட்டு கொல்வது குறித்து ஆட்சியர் பேசுகையில், காட்டுப்பன்றிகளை சுட் டுக்கொல்ல கேரள மாநிலத்தில் நடை முறைப்படுத்தப்படும் ஆனையை இணைத்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். தமிழக அர சும் இதன் முக்கியத்துவம் கருதி ஆலோ சனை மேற்கொண்டு வருகிறது. நல்ல தீர்வு விரைவில் எட்டப்படும், என்றார்.