districts

img

இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு விவசாயிகள் போராட்டம்

நாமக்கல், ஜூலை 6- வீடற்ற விவசாயத் தொழிலாளர் கள் குடும்பத்திற்கு இலவச வீட்டு மனை வழங்க வலியுறுத்தி விவசா யத் தொழிலாளர் சங்கத்தினர், நாமக்கல் ஆட்சியர் அலுவலகத் தில் வெள்ளியன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பர பரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், குமாரபா ளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான விவசாயத் தொழிலாளர் குடும்பத்தினர் உள்ள னர். இந்நிலையில் இவர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு, விவசாயத் தொழிலாளர் சங்கத்தி னர் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்ற னர். இந்நிலையில், குமாரபாளை யம் சுற்றுவட்டாரப் பகுதிகளாக இருக்கக்கூடிய வாசுகி நகர், நேரு  நகர், குளத்துக்காடு, தட்டாங் குட்டை, மஞ்சு பாளையம், சவுதா புரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த  நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த வர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள், சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.துரைசாமி தலைமையில் ஆட்சி யர் அலுவலகம் சென்று மனு அளிக்க சென்றிருந்தனர். அப்பொ ழுது அங்கிருந்த ஊழியர்கள் ஆட்சி யர் இல்லை, கலைந்து போகச் சொல்லி நிர்பந்தித்துள்ளனர். இவர் களுடன் இணைந்து போலீசாரும் கலைந்து போகுமாறு தெரிவித்துள் ளனர். இதனை ஏற்காத விவசாய தொழிலாளர் சங்கத்தின் தலைமை யில் திரண்ட பொதுமக்கள் ஆட்சி யர் வரும் வரை கலைந்து போவ தில்லை எனத்தெரிவித்து, ஆட்சி யர் அலுவலக வளாகப் பகுதியிலே காத்திருப்புப் போராட்டத்தை மேற் கொண்டனர். இதனைத்தொடர்ந்து, ஆட்சி யர் நேரிடையாக வந்து விபரங் களை கேட்டறிந்தார். பின்னர், இல வச வீட்டு மனை பட்டா அளிப்பது, குறித்து உரிய நடவடிக்கை எடுக் கப்படும் என அவர்களிடம் உறுதி அளித்தார். மேலும், குமாரபாளை யம் வட்டாட்சியர் சண்முகவே லுவை அழைத்து, இது குறித்து  உரிய விசாரணை மேற்கொண்டு  அறிக்கை அனுப்பும்படி அறிவுறுத் தினார். இவ்வியக்கத்தில், சிஐடியு மாவட் டச் செயலாளர் என்.வேலுச்சாமி, தொழிற்சங்க நிர்வாகிகள் சிவ ராஜ், கரும்பு வெட்டும் தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கோவிந்தசாமி, கரும்பு வெட்டும் தொழிலாளர் சங்க மாவட்டத் தலை வர் குருசாமி, சங்க நிர்வாகிகள் சின்னதாய், சித்ரா, ரேவதி, முரு கன், சண்முகம், முருகேசன், மாவட் டக்குழு உறுப்பினர் நடேசன் உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.