districts

img

வாழைத்தார்களின் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

கோபி, ஜன. 13- கோபி வேளாண்மை உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்பனை சங் கத்தில் மூன்று மாதத்திற்கு பிறகு பொங்கல் பண்டிகையையொட்டி வாழைத்தார்களின் விலை உயர்ந்து காணப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஈரோடுமாவட்டம் கோபிசெட்டி பாளையம் அதன் சுற்றுவட்டார பகுதி யில் கதளி, நேந்திரன், பூவன், செவ் வாழை, தேன்வாழை, ரஸ்தாளி உள் ளிட்ட பல்வேறு ரகங்களில் ஆயிரக் கணக்கான ஏக்கர் பரப்பளவில் சாகு படி செய்து வருகின்றனர்  வாழை சாகுபடியில் அறுவடை செய்த வாழைத்தார்களை பெரும்பா லான விவசாயிகள்  கோபிசெட்டிபா ளையம் வேளாண்மை உற்பத்தியா ளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத் தில் வாரம் இரு தினங்கள் நடைபெ றும் வாழைத்தார் ஏலத்தில் கலந்து கொண்டு விற்பனை செய்து வருகின் றனர்  இந்நிலையில், பொங்கல் பண்டி கையையொட்டி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற் பனை சங்கத்தில் நடைபெற்ற ஏல விற்பனைக்கு 6 ஆயிரத்திற்கும் அதி கமான வாழைத்தார்கள் விற்ப னைக்கு வந்தன. இதில், பொங்கல்  பண்டிகையையொட்டி பொதுமக் கள் பண்டிகைக்கு வழிபாடு செய்ய  வாழை பழங்களை அதிகளவில் வாங்குவதால், ஏல விற்பனையில் கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக் கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு வாழைத்தார்களை போட்டி போட்டுக்கொண்டு ஏலத்தை  எடுத்தனர். இதில் அதிகபட்சமாக பூவன் வாழை ரூ.900க்கும் செவ்வாழை ரூ. 760க்கும் தேன்வாழை ரூ.510க்கும் விற்பனை ஆனது மேலும் கதளி கிலோ ஒன்றுக்கு ரூ.33க்கும் நேந்தி ரன் கிலோ ஒன்றுக்கு ரூ.23 க்கும்  விற்பனை ஆனதில் கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.12 இலட்சத்து 90ஆயிரம் ரூபாய்க்கு விற் பனை ஆனது. கடந்த சில மாதமாக மழை, குளிர்  என்பதால் வாழைத்தார் ஏல விற் பனை மந்தமாக காணப்பட்டு வந்த  நிலையில் தீபாவளி பண்டிக்கைக்கு  பிறகு பொங்கல் பண்டிகையை யொட்டி மூன்று மாதத்திற்கு பிறகு  வாழைத்தார்களின் விலை உயர் வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந் தனர்.