districts

img

நல்லதங்காள் அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் முழு இழப்பீடு கோரி தொடர் போராட்டம்

திருப்பூர், ஆக. 23 - திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கோனேரிப்பட்டி பகுதி யில் நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்கத் துக்கு நிலம் கொடுத்த 170 விவசாயிகள்  நியாயமான இழப்பீடு வழங்கக் கோரி  தொடர்ந்து 11ஆவது நாளாக காத்தி ருப்பு போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் விவசாயிகள் தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்று கையிட்டு  கோட்டாட்சியரிடம் முழு இழப்பீடு கேட்டு மனு கொடுத்தனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த பொன்னிவாடி கிராமத்தில் உள்ள நல்லதங்காள் நீர்த்தேக்க அணை  கட்டுமான பணிக்கு விவசாயிகள் நிலம்  கொடுத்தனர். உரிய இழப்பீடு வழங்க  கோரி கோனேரிபட்டியில் இரவு பகலாக  தொடர் காத்திருப்பு போராட்டத்தில் இந்த விவசாயிகள் ஈடுபட்டு வருகின் றனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட நல் லதங்காள் ஓடை அணை விவசாயிகள் தாராபுரம் கோட்டாட்சியர் அலுவல கத்தில் மனு கொடுக்க செவ்வாயன்று வந்தனர். நீண்ட நேரம் காத்திருந்தும் மனுவை வாங்குவதற்கு கோட்டாட்சி யர் செந்தில் அரசன் காலதாமதம் செய்த தால், கோட்டாட்சியர் அலுவலக அறை  முன்பு தரையில் அமர்ந்து காத்திருந்த னர் இதையடுத்து அங்கு வந்த கோட் டாட்சியர் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் தரையில் அமர வேண்டாம் தங்களின் மனுவை பெற்றுக் பெற்றுக் கொள்கிறேன் என  கூறி விவசாயிகளை கூட்ட அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர் களை அமர வைத்து அவர்கள் கொண்டு  வந்திருந்த மனுவை பெற்றுக் கொண் டார்.

அதன் பிறகு விவசாயிகளுக்கு உரிய நடவடிக்கை எடுத்து விரைவில்  முழு இழப்பீட்டுத் தொகை வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதனை தொடர்ந்து விவ சாயிகள் அங்கிருந்து கலைந்து சென்ற னர். இது குறித்து விவசாயி பாலசுப்பிரம ணியன் தெரிவிக்கையில்:- பொன்னி வாடி கிராமத்தில் உள்ள நல்லதங்காள்  ஓடை நீர்தேக்க அணை கட்டுமான  பணிக்காக 150 விவசாயிகளிடமிருந்து 750 ஏக்கர் நிலத்தை பொதுப்பணித் துறை அதிகாரிகள் கடந்த 1997ஆம் ஆண்டு கையகப்படுத்தினர். 2000ஆம்  ஆண்டு அணை கட்டுமான பணிகளைத்  தொடங்கினர். அப்போது விவசாயிகளி டம் அணை கட்டுவதற்காக நிலம் கைய கப்படுத்தப்பட்டது. நிலம் கொடுத்த விவ சாயிகள் உரிய இழப்பீட்டுத் தொகை கேட்டு 2003ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். நீதிமன் றம் தீர்ப்பு வந்தும் தாராபுரம் பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் விவசாயிக ளுக்கு 24 ஆண்டுகளாக இழப்பீட்டுத் தொகை வழங்காமல் விவசாயிகளை ஏமாற்றி வருவதாக தெரிவித்தார். அன்றைய திமுக அரசும் தற்போது செய்தித்துறை அமைச்சராக உள்ள சாமிநாதன் மற்றும் முன்னாள் பழனி நாடாளுமன்ற தொகுதி எம்பி ஆக இருந்த எஸ்.கே. கார்வேந்தன் ஆகி யோர் அணை கட்ட நிலம் கொடுங்கள்  என சொன்னதால் நிலம் கொடுத்தோம். ஆனால் 24 ஆண்டுகள் கடந்தும் விவ சாயிகளிடம் வாங்கிய நிலத்திற்கு அரசு  இழப்பீடு வழங்கவில்லை. இழப்பீடு கிடைக்கும் வரை, சாகும் வரை தொடர்  காத்திருப்பு போராட்டத்தில் இருப் போம் என தெரிவித்தார்.