districts

img

வேளாண் விரோத ஒன்றிய பாஜக அரசு

சேலம், டிச 16- தில்லியில் தொடர் போராட்டத் தில் ஈடுபட்டு வரும் விவசாயிக ளுக்கு ஆதரவாக, மாநிலம் முழு வதும் ரயில் மறியல் போராட்டத் தில் ஈடுபட முயன்ற விவசாயிகளை  ரயில்வே போலீசார் தடுத்து நிறுத்தி னர். வேளாண் விரோத ஒன்றிய பாஜக தலைமையிலான அரசை கண்டித்து, நாடு முழுவதுமிருந்து  விவசாயிகள் திரண்டு தலைநகர் தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு  வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஐக்கிய விவ சாயிகள் சங்கம் சார்பில் தமிழ்நாடு  மற்றும் புதுச்சேரியில் ரயில் மறியல்  போராட்டம் நடைபெற்றது. அதன்  ஒரு பகுதியாக சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் முன்பு ஐக்கிய விவ சாயிகள் சங்கத்தின் சேலம் மாவட்ட  ஒருங்கிணைப்பாளர் தங்கராஜ்  தலைமையில் விவசாயிகள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது  தில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை மத்திய அரசு அழைத்து பேசி வேளாண் விளைப் பொருட்க ளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை  நிர்ணயிக்க வேண்டும், விவசாயி கள் பெற்ற கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி முழக்கங் களை எழுப்பினர். பின்னர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டிருந்த விவ சாயிகள் திடீரென ரயில் மறியலில் ஈடுபட முயன்ற போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் ரயில் நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. கோவை ஒன்றிய அரசின் வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்களை வலியுறுத்தி தமிழ் நாடு அனைத்து விவசாயிகள் சங்க  கூட்டமைப்பினர் கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு மறி யலில் ஈடுபட்டனர். இதில் திரளான விவசாயிகள் பங்கேற்றனர்.