districts

img

கார்ப்பரேட் கொள்ளையர்களே! விவசாயத்தை விட்டு வெளியேறு! ஊத்துக்குளியில் விவசாயிகள் முழக்கம்

திருப்பூர், ஆக. 9 – கார்ப்பரேட் கொள்ளையர்களே விவசாயத்தை விட்டு வெளியேறு என் கிற முழக்கத்தை முன்வைத்து ஊத்துக் குளியில் ஐக்கிய விவசாயிகள் முன் னணி (எஸ்கேஎம்) சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஆகஸ்ட் 9 வெள்ளையனே வெளி யேறு இயக்க நாளில் கார்ப்பரேட் கொள் ளையர்களே விவசாயத்தை விட்டு வெளியேறு என்ற முழக்கத்தை முன் வைத்து ஐக்கிய விவசாயிகள் முன் னணி அறைகூவலை ஏற்று மாநிலம் தழு விய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஒன்றிய மோடி அரசு டெல்லி  விவசாயிகள் போராட்டத்தில் ஒப்புக் கொண்ட கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தியும், விவசாய உற் பத்தி பொருள்களுக்கு சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி கட்டுப்படியான விலை வழங்கவும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் திற்கு கூடுதல் நிதி ஒதுக்கவும், விவசா யத்திற்கு முன்னுரிமை கொடுக்காமல் கார்ப்பரேட்டுகளுக்கு அதிக சலுகை  கொடுக்கும் மோடி அரசை கண்டித்தும்  இந்த ஆர்ப்பாட்டத்தில் முழக்கம் எழுப் பப்பட்டது.   இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் மாவட்ட தலைவர்கள் எஸ்.ஆர்.மதுசூதனன், கே.சின்னச்சாமி தலைமை வகித்தனர்.  கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் மாவட்டச் செயலாளர்கள் ஆர்.குமார், எஸ்.சின்ன சாமி, அகில இந்திய விவசாய தொழிலா ளர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.பஞ்ச லிங்கம், தமிழ் மாநில விவசாயிகள்  தொழிலாளர் சங்க மாவட்டச் செயலா ளர் வி.பி.பழனிசாமி ஆகியோர் உரை யாற்றினர். இந்த நிகழ்வில் விவசாயி கள் சங்க நிர்வாகிகள் எஸ்.கே.கொளந் தசாமி, ஜி.கே.கேசவன், ஊத்துக்குளி பேரூராட்சி துணைத் தலைவர் வி.ஏ. சரவணன், கவுன்சிலர் கு.சரஸ்வதி, சர்க் கார் கத்தாங்கன்னி ஊராட்சித் தலைவர் ம.செல்வி உள்ளிட்ட திரளான விவசாயி கள் கலந்து கொண்டனர்.