திருப்பூர், மார்ச் 22- அமராவதி சர்க்கரை ஆலையை நவீனப்படுத்தி இயக்குமாறு தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத் தியுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மடத்துக்குளம் தாலுக்கா மாநாடு செவ்வாய்க்கிழமை மடத்துக்குளத் தில் தாலுக்கா தலைவர் எம்.முத்து சாமி தலைமையில் நடைபெற்றது. தாலுக்கா செயலாளர் எல்.கார்த்தி கேயன் வேலை அறிக்கை முன்வைத் தார். டி.சுப்பிரமணியன் வரவேற்றார்.மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.மதுசூ தனன், மாவட்ட துணைத் தலைவர் ஏ. பாலதண்டபாணி ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். மடத்துக்குளம், குமரலிங்கம், கணி யூர் பேரூராட்சிகளில் உழவர் சந்தை கள் திறக்க வேண்டும். அப்பர் அமரா வதி அணை திட்டம் நிறைவேற்ற வேண் டும். அமராவதி சர்க்கரை ஆலையை நவீனப்படுத்த வேண்டும். மடத்துக் குளம் பகுதிகளில் நடைபெறும் கனிம வள கொள்ளையை தடுக்க வேண் டும். நான்கு வழிசாலைக்கு நில சீர் திருத்த சட்டபடி ஏழைகளுக்கு வழங் கப்பட்ட நிலங்களில் மண்கிரவல் மண் எடுத்து பலநூறு ஏக்கர் விளை நிலங்கள் பாழ்பட்டு விட்டது. மேலும், விளைநிலங்கள் சேதமாவதை தடுத் திட வேண்டும். மயில், காட்டுப்பன்றி என வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப் பிற்கு இழப்பீடு வழங்க வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இந்த மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தாலுகா தலைவராக எம்.முத்துசாமி, செயலாளராக வி.ஏ.ஈஸ்வரன்,பெரு ளாளராக டி.சுப்பிரமணியம், உதவி தலைவராக எல்.கார்த்திகேயன், உதவி செயலாளராக பெரியசாமி ஆகி யோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட் டனர். நிறைவாக வெள்ளியங்கிரி நன்றி தெரிவித்தார்.