districts

img

கால்நடைகளுக்கு நோய் தாக்குதல் அதிகரிப்பு

திருப்பூர், டிச. 1 - திருப்பூர் மாவட்டத்தில் பருவ நிலை மாற் றம் காரணமாக கால்நடைகளுக்கு பல்வேறு  விதமான நோய்த் தாக்குதல் அதிகரித்து வரு கிறது. வழக்கமாக இந்த காலத்தில் போடப்ப டும் தடுப்பூசிகள் இதுவரை போடப்பட வில்லை. எனவே உடனடியாக தடுப்பூசிகள் போட்டு கால்நடைகளைப் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலி யுறுத்தி உள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப் பூர் மாவட்ட குழு கூட்டம் புதன்கிழமை பல்ல டம் பி.ராமமூர்த்தி நினைவகத்தில் மாவட்ட  தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் தலைமை யில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஆர். குமார் வேலையறிக்கை மற்றும் மாவட்ட விவ சாய நிலைமைகளை முன்வைத்தார். மாநில  துணைத் தலைவர் பி.டெல்லிபாபு, மாநிலக்  குழு முடிவுகளை விளக்கி சிறப்புரை ஆற்றி னார்.  மாவட்ட நிர்வாகிகள் எஸ்.பரமசிவம், வை.பழனிசாமி உட்பட மாவட்ட குழு உறுப் பினர்கள் கலந்து கொண்டனர்.

டிசம்பர் 13-16  வரை திருச்சூரில் நடைபெறும் அகில இந்திய  விவசாயிகள் சங்கத்தின் மாநாட்டையொட்டி தெலுங்கானா, வெண்மணி, சேலம் சிறைத்  தியாகிகள் நினைவாக தியாக ஜோதி எடுத்து  வரப்படுகிறது.  இந்நிகழ்வில் அகில இந்திய துணைத் தலைவர் கே.பாலகிருஷ்ணன், நிதிச் செயலா ளர் கிருஷ்ணபிரசாத், இணைச்செயலாளர் விஜூ கிருஷ்ணன், மாநில பொருளாளர் கே. பி.பெருமாள், துணைத் தலைவர் பி.டில்லி பாபு உள்ளிட்டவர்கள் பங்கேற்கின்றனர்.  திருப்பூர் மாவட்டத்திற்கு வரும் தியாக ஜோதி பயணக்குழுவிற்கு டிசம்பர் 9-ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஊத்துக்குளியில் வர வேற்பு பொதுக்கூட்டமும், டிசம்பர் 10-ஆம் தேதி காலை 8 மணிக்கு பெருமாநல்லூர், 8.30  மணி அவிநாசி பைபாஸ், 9.30 மணி இடுவாய்,  10 மணி பல்லடம் பேருந்து நிலையம் ஆகிய  இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிப்பது  எனவும் முடிவு செய்யப்பட்டது.  மேலும், இக்கூட்டத்தில், திருப்பூர் மாவட் டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் உட்பட பல்வேறு நோய் தாக்குதல்கள் ஏற் பட்டு வருகிறது. ஆண்டுதோறும் போடப் படும் தடுப்பூசிகள் இக்காலத்தில் போடப்ப டவில்லை. பருவ மழை காலமாக உள்ள இக் காலத்தில் மேலும் நோய் தாக்குதல்கள் நேரா மல் தடுக்க தடுப்பூசிகள் முறையாக செலுத்த  நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங் களில் பெய்த மழையால் மக்காச்சோளம், காளிப்பிளவர்,

பீட்ரூட் உட்பட பயிர்கள்  சேதம் அடைந்துள்ளது. அதேபோல காட்டுப் பன்றிகள் மற்றும் வனவிலங்குகளால் பயிர் கள் நாசப்படுத்தப்பட்டு உள்ளது. மழையா லும், வனவிலங்குகளாலும் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண் டும்.  மாத, மாதம், மாவட்ட ஆட்சியர் தலைமை யில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க் கும் நாள் கூட்டங்களிலும், கோட்டாட்சியர் குறைதீர் கூட்டங்களிலும் விவசாயிகள் குறை களை தெரிவிப்பதற்கும், கொடுக்கப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என அரசு  ஆணை உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் மேற்காணும் கூட்டங்களில் கொடுக்கப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டது.