தருமபுரி, டிச.12- வீட்டின் வழிப்பாதையை சுற்றி சுவர் கட்டி அடைத்துள்ளதால்,தனது வீட்டிற்கு ஹெலிகாப்டரி்ல் சென்று வர அனுமதி வழங்க வேண்டும். என பொம் மை ஹெலிகாப்டருடன் விவசாயி ஒரு வர் தனது குடு்ம்பத்துடன் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் நூதன புகார் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகேவுள்ள கே. அக்ரஹாரம் மேல் தெருவை சேர்ந்த கணேசன் (57) விவ சாயி. இவர் அளித்துள்ள மனுவில் தெரி வித்துள்ளதாவது, தன்னுடைய வீட் டிற்கு காலகாலமாக சென்று வந்த வழிப்பாதையை வீட்டருகே உள்ள வர்கள் நாலாபுறமும் அடைத்து, தடுப்புச்சுவர் கட்டியுள்ளனர். இதனால், எனது சொந்த வீட்டிற்கே சென்று வர முடியவில்லை. வேறு வழியில்லாமல் கடந்த நான்கு மாதத்திற்கு மேலாக உறவினர் ஒருவரது வீட்டில் தஞ்ச மடைந்துள்ளேன். தனது பிரச்சனை தொடர்பாக சம்மந்தபட்ட காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்டோரிடம் புகார் மனு அளித்தும், இதுவரை நடவ டிக்கை எடுக்கவில்லை. தரை வழியில் தான், தனது வீட்டிற்கு சென்று வர முடியவில்லை. ஆகாய மார்கமாக ஹெலிகாப்ட்டரிலாவது சென்று வர தருமபுரி மாவட்ட நிர்வாகம அனு மதி வழங்க வேண்டும் என புகார் மனு வில் தெரிவித்துள்ளார். பொம்மை ஹெலிகாப்ட்டரை கையில் பிடித்தபடி விவசாயி தனது குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் புகார் மனு அளிக்க வந்தி ருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யது.