districts

img

பண்ணை முதலாளியா, கோட்டப் பொறியாளர்? சாலைப் பணியாளர்கள் தர்ணா

தாராபுரம், மார்ச் 21 - தாராபுரத்தில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளரை கண்டித்து சாலை பணியாளர்கள், நெடுஞ்சாலைத்துறை அலு வலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட் டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை  பணியாளர்கள் சங்கம் சார்பில் கோட்ட பொறி யாளரை கண்டித்து தர்ணா போராட்டம் நடை பெற்றது. இப்போராட்டத்திற்கு கோட்ட தலை வர் கே.வெங்கிடுசாமி தலைமை வகித்தார்.  இந்த போராட்டம் குறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன் கூறு கையில், தாராபுரம் கோட்ட பொறியாளர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை  பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கை கள், அரசு வழங்கியுள்ள உரிமைகளை வழங் கக் கோரி மனு கொடுக்க வந்த சங்க நிர்வாகி களை பல மணி நேரம் காக்க வைத்து பின்னர்  சந்திக்க முடியாது என மறுத்துவிட்டார். இவர் அரசு அதிகாரி போல் நடந்து கொள் ளாமல் பண்ணை முதலாளி போல் நடந்து வரு கிறார். சாலை பணியாளர்களை, அரசு ஊழி யர்களை, சங்கப் பிரதிநிதிகளை சந்திக்க மறுக்கும் போக்கு கோட்ட பொறியாளருக்கு ஏற்புடையதல்ல. இவர் பெரும்பாலான நாட் கள் அலுவலகத்திற்கு வருவதில்லை. வந்தா லும் துறை ஊழியர்கள் யாரையும் சந்திப்ப தில்லை.

பிரச்சனைகளுக்கு தீர்வு காண என்ன வழி என்பது தெரியாமல் பலரும் சிரமப் படுகின்றனர். எனவே தாராபுரம் கோட்ட பொறியாளர் மீது துறை ரீதியான நடவ டிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். எரிச்சல் அடைந்த பொறியாளர் தொடர்ந்து சாலைபணியாளர்கள் போராட் டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், கோட்ட  பொறியாளர் அலுவலகத்திலிருந்து வெளியே வந்து, “சத்தம் போடாதீங்க. எனக்கு  ரொம்ப டிஸ்டர்ப் ஆக இருக்கிறது. கோசத்தை நிறுத்துங்க, வேலை நேரத்தில் எப் படி ஆர்ப்பாட்டம் செய்ய வந்தீர்கள்” என ஊழி யர்களை பார்த்து கேட்டார். அனைவரும் வேலைக்கு விடுப்பு லெட்டர் கொடுத்து விட்டு  ஆர்ப்பாட்டத்திற்கு வந்ததாக ஊழியர்கள் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து யாரும் வீடியோ, போட்டோ எடுப்பது எனக்கு பிடிக் காது என கூறிவிட்டு அவர் மீண்டும் அலுவ லகத்துக்குள் சென்றுவிட்டார்.  அதன் பிறகு தொடர்ந்து கோட்ட பொறியா ளர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். போராட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் ஆ.அம்சராஜ், கோட்ட செயலா ளர் இல.தில்லையப்பன், கோட்ட இணைச்செ யலாளர் சிவகுமார் மற்றும் மணிமொழி மாநில பொதுக்குழு உறுப்பினர் செல்வகு மார் உள்பட தாராபுரம், காங்கேயம், வெள்ள கோவில், மூலனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சாலை பணி யாளர்கள் கலந்து கொண்டனர்.